பதவி இழந்த பொன்முடி; ராஜ கண்ணப்பன், காந்திக்கு கூடுதல் துறைகள்: ஆளுனர் ரவி ஒப்புதல்

பொன்முடி வகித்து வந்த உயர்கல்வித்துறை பொறுப்பு தற்போது அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கி உள்ளார்.

பொன்முடி வகித்து வந்த உயர்கல்வித்துறை பொறுப்பு தற்போது அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கி உள்ளார்.

author-image
WebDesk
New Update
sada
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

பொன்முடி வகித்து வந்த உயர்கல்வித்துறை பொறுப்பு தற்போது அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கி உள்ளார்.   

Advertisment

சொத்துக்கு குவிப்பு வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு  3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு  செய்ய ஏதுவாக 30 நாட்கள் சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பொன்முடி குற்றாவாளி என்று நிரூபிக்கப்பட்டதால், அவரின் எம்.எல்.ஏ, அமைச்சர் பதவிகளை இழந்துள்ளார். இந்நிலையில் அவர் வகித்து வந்த உயர்கல்வித்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்  மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.  ராஜ கண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்க ஆளுநருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். இந்நிலையில் ஆளுநர் இதற்கு ஒப்புதல் வழங்கி உள்ளார். மேலும் ராஜகண்ணப்பனிடம் இருந்த காதி மற்றும் கிராம தொழில்கள் வாரியத்துறை, அமைச்சர் காந்திக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கும் ஆளுநர் ஒப்புதல் வழங்கி உள்ளார். 

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment
Advertisements

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: