பத்திரிகையாளர் கோபால் குறித்து அவதூறு பேச்சு: அர்ஜுன் சம்பத்தின் மகன் கைது

மூத்த பத்திரிகையாளர் கோபால் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகன் கைது செய்யப்பட்டார்.

மூத்த பத்திரிகையாளர் கோபால் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகன் கைது செய்யப்பட்டார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Omkar Balaji arrest

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகனும், அக்கட்சியின் இளைஞரணி தலைவருமான ஓம்கார் பாலாஜியை போலீசார் கைது செய்தனர்.

Advertisment

சத்குருவின் இஷா அறக்கட்டளை மற்றும் யோகா மையத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை கண்டித்து, கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி கோவை மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மற்றும் அவரது மகன் ஓம்கார் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர். 

அப்போது, மூத்த பத்திரிகையாளர் கோபால் குறித்து அவதூறு பரப்பும் விதமாக ஓம்கார் பாலாஜி பேசியதாக, அப்துல் ஜலீல் என்பவர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

இந்நிலையில், நேற்றைய தினம் முன் ஜாமின் மனு விசாரணைக்காக சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பாலாஜி வந்திருந்தார். அப்போது, பாலாஜியின் கைதுக்கு தடை விதிக்க முடியாது என நீதிமன்றம் மறுத்து விட்டது.

Advertisment
Advertisements

இதைத் தொடர்ந்து, போலீசார் அவரை கைது செய்தனர். மேலும், பாலாஜியை விசாரணைக்காக கோவைக்கு அழைத்துச் சென்றனர்.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Arjun Sampath Arrest

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: