கோயில் நிதியில் திருமண மண்டபங்கள்: அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது- நீதிமன்றம் இடைக்காலத் தடை

கோயில் நிதியைப் பயன்படுத்தி திருமண மண்டபங்கள் கட்டுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

கோயில் நிதியைப் பயன்படுத்தி திருமண மண்டபங்கள் கட்டுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Madurai HighCourt questions over Thiruchendur kandha sasti darsan fee Tamil News

கோயில் நிதியைப் பயன்படுத்தி திருமண மண்டபங்கள் கட்டுவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது எனச் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.    

Advertisment

கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், தமிழகத்தில் உள்ள 27 பெரிய கோயில்களில் உபரியாக உள்ள நிதியைப் பயன்படுத்தி சுமார் 80 கோடி ரூபாய் செலவில் திருமண மண்டபங்கள் கட்டப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு, கோயில்களின் நிதி ஆதாரங்களை மேம்படுத்துவதையும், பக்தர்களுக்கு வசதிகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, பழனி கோயிலுக்கு உட்பட்ட ஒட்டஞ்சத்திரம் அருகே உள்ள கள்ளிமந்தையம் வரதராஜப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் 6 கோடி ரூபாய் மதிப்பில் திருமண மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோயில் நிதியைப் பயன்படுத்தி வணிக நோக்கத்துடன் திருமண மண்டபம் கட்டுவதற்கு தடை விதிக்க கோரி உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று (ஜூன் 7, 2025) நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோயில் நிதியைப் பயன்படுத்தி திருமண மண்டபங்கள் கட்டுவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது எனத் தெரிவித்து இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: