/indian-express-tamil/media/media_files/2024/10/29/2m8fYPTutJ4R7ecT4w6m.jpg)
சென்னையில் அக்டோபர் 28-ம் தேதி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்தார். Photograph: (IE Tamil)
மோன்தா புயல் காரணமாக கடந்த 28-ம் தேதி சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால், விடுமுறையை ஈடு செய்ய சென்னையில் நாளை பள்ளிகள் செயல்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சனிக்கிழமை (01.11.2025) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான ‘மோன்தா’ புயல் அக்டோபர் 28-ம் தேதி ஆந்திராவின் மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடம் இடையே கரையைக் கடந்தது. மோன்தா புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால், சென்னையில் அக்டோபர் 28-ம் தேதி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்தார். அதேபோல, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது.
மோன்தா புயல் காரணமாக கடந்த 28-ம் தேதி சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால், விடுமுறையை ஈடு செய்ய சென்னையில் இந்த சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு சனிக்கிழமை (01.11.2025) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், சென்னையில் இந்த சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை உறுதி செய்யப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us