/tamil-ie/media/media_files/uploads/2022/01/school.jpg)
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது. வைரஸ் பரவலை தடுத்திட ஞாயிறு முழு ஊரடங்கு மற்றும் தினசரி இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு 10, 11 மற்றும் 12 ஆகிய வகுப்பு மாணவர்கள் மட்டும் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையொட்டி 10, 11, 12ம் வகுப்புகளுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " கொரோனா பெருந்தொற்று காரணமாக 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு தற்போது 10 முதல் 12 வரையிலான வகுப்புகள் மட்டும் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அதிகரித்து வரும் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி வரும் 31ஆம் தேதி வரை 10, 11 மற்றும் 12 உள்ளிட்ட அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.
இதனையடுத்து, வரும் 19 அன்று தொடங்கி 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு நடக்கவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுகின்றன. தேர்வு குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 10 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைனிலேயே பாடம் நடத்துவது குறித்து ஆலோசிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில், தொடர் விடுமுறை அறிவிப்பை வெளியிட்டு மாணவர்களை தமிழக அரசு சர்ப்ரைஸ் செய்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.