விழுப்புரம் மாவட்டத்தில் மழை பெய்து வரும் நிலையில், இன்று (அக்-19) பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக, வரும் 22-ஆம் தேதி வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனிடையே, பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது மிதமான முதல் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மழையின் காரணமாக விழுப்புரத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளுக்கு இன்று வழக்கம் போல் வாரவிடுமுறை விடுக்கப்பட்டிருந்த நிலையில், தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.