/tamil-ie/media/media_files/uploads/2023/07/Kirupa.jpg)
உயிரிழந்த புதுப்பெண் கிருபா
கரூர் மாவட்டம் பசுபதிபாளையத்தை சேர்ந்தவர் தினேஷ் குமார் என்பவருக்கும் எம்.காம் பட்டதாரியான கிருபா (25) என்பவருக்கும் கடந்த இரண்டரை மாதத்துக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது.
இவர்கள் ஹனிமூனுக்காக கன்னியாகுமரி மாவட்டம் வந்துள்ளனர். இந்த நிலையில் அருமனையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கி, அங்குள்ள களியல் பகுதிகளை சுற்றிப் பார்த்து ரசித்து வந்தனர்.
இந்த நிலையில் உணவு சாப்பிட்டபோது கிருபா திடீரென வாந்தி எடுத்தார். தொடர்ந்து, நெஞ்சு வலிக்கிறது எனக் கூறிக்கொண்டு மயக்கம் போட்டார் எனக் கூறப்படுகிறது.
அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். தற்போது அவரின் உடல் தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
ஹனிமூன் வந்த இடத்தில் புதுப்பெண் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில் புதுப்பெண் நண்டு சாப்பிட்டதாகவும், அந்த உணவு ஏதேனும் பிரச்னையை ஏற்படுத்தியிருக்க கூடுமா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.
செய்தியாளர் த.இ. தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.