கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை; 3 பேருக்கு வலைவீச்சு

ஆண் நண்பருடன் காரில் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம், கோவையில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆண் நண்பருடன் காரில் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம், கோவையில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
covai rape issue

கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை; 3 பேருக்கு வலைவீச்சு

கோவை விமான நிலையம் அருகே ஆண் நண்பருடன் காரில் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை, மூன்று பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் ஆண் நண்பரையும் அந்தக் கும்பல் கொடூரமாகத் தாக்கியுள்ளது.

Advertisment

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பின்புறம் உள்ள காலி இடத்தில், தனியார் கல்லூரி ஒன்றில் முதுகலை முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவர், நேற்று இரவு 11 மணியளவில் தனது ஆண் நண்பரான வினித் என்பவருடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், இருவரையும் தாக்கியுள்ளது. முதலில் வினித்தை கடுமையாகத் தாக்கிய அந்த கும்பல், பின்னர் அந்த மாணவியைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

தாக்குதலில் படுகாயமடைந்த வினித், இது குறித்து உடனடியாக காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பீளமேடு காவல்துறையினர், அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த மாணவியை நிர்வாண நிலையில் மீட்ட காவல்துறையினர், உடனடியாக அவரை அருகே உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். கொடூரத் தாக்குதலுக்கு உள்ளான வினித், படுகாயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டு தப்பி ஓடிய 3 குற்றவாளிகளையும் பிடிக்க, பீளமேடு காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர். சம்பவ இடத்திலிருந்து, மாணவியின் ஆண் நண்பருக்குச் சொந்தமான TN37EY4249 என்ற பதிவெண் கொண்ட வெள்ளை நிற Swift கார் மீட்கப்பட்டுள்ளது. அந்தக் கார் கும்பலால் தாக்கப்பட்டு, கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. காருக்குள் பெண்களின் 'மணி பர்ஸ்' ஒன்றும், உடைந்த கண்ணாடிச் சில்லுகளும் கிடந்தன. மீட்கப்பட்ட கார், ஆதாரமாக பீளமேடு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு உள்ளது.

Advertisment
Advertisements
Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: