“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
ஊரடங்கு நேரத்தில் உணவுக்காக ஏழைகள் கஷ்டப்படுவதால் குறைந்த விலையில் பார்சல் உணவுகளை விற்பனை செய்யுமாறு ஓட்டல்களுக்கு உத்தரவிடக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரமலான் நோன்புக்காக பள்ளிவாசல்களுக்கு இலவச அரிசி – தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு
இதுதொடர்பாக வழக்கறிஞர் ராம. சிவசங்கர் தாக்கல் செய்துள்ள மனுவில், ஓட்டல்களையே நம்பி வாழும் இளைஞர்களுக்கும், குடும்பத்தினருக்கும் விலையேற்றம் கூடுதல் கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதால்,
இது குறித்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்க கோரி ஏப்ரல் 12ஆம் தேதி தமிழக அரசுக்கு மனு அனுப்பியும், எந்த நடவடிக்கையோ, பதிலோ இல்லை என குறிப்பிட்டுள்ளார். அதனடிப்படையில், ஓட்டல்களில் குறைந்த விலையில் பார்சல்களை விற்பனை செய்வதை முறைபடுத்துமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். அதேபோல ஓட்டல்களின் அருகில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக உணவுகளை வழங்க வேண்டுமென் அறிவுறுத்தல் வழங்கவும் அரசுக்கு உத்தரவிட கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் சத்யநாராயணன், நிர்மல்குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Hotels to sale parcel food in low cost case madras high court tn govt covid
இங்கிலாந்து தொடர்: சந்தீப் வாரியரை அனுப்ப அவகாசம் கேட்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்
அதிபர் பைடன் அலுவலகத்தில் நிலாவின் பாறைத் துண்டு: இதற்கு என்ன முக்கியத்துவம்?
டெல்லி போராட்டக் களத்தை நோக்கி நகரும் பெண்கள் தலையில் ரொட்டி நிறைந்த பைகள்
Tamil news today live : திமுக தேர்தல் வாக்குறுதிகள் ..மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்!