தமிழ்நாட்டில் கடந்த கடைசி வாரங்களில் வெளுத்து வாங்கத் தொடங்கிய வெயில், மே மாதத்தின் பாதிக்கு மேல் குறைந்து காணப்பட்டது. வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் முழுதும் பரவலாக மழை பெய்து மக்களை மகிழ்வித்தது. தென்காசி பழைய குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
ஆனால், கடந்த சில நாட்களாக வெயில் மீண்டும் பட்டையை கிளப்பி வருகிறது. காலை 7 மணிக்கெல்லாம் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று 12 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்தியுள்ளது.
மீனம்பாக்கம் - 106.34, நுங்கம்பாக்கம் - 105.98, திருத்தணி, வேலூர் - 104.36, திருப்பத்தூர் - 101.84, மதுரை நகரம் - 101.48, பரங்கிப்பேட்டை - 101.3, மதுரை விமான நிலையம், புதுச்சேரி - 101.12, நாகப்பட்டினம் - 100.76, தஞ்சாவூர் - 100.4, கடலூர் - 100.04 உள்ளிட்ட இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“