/indian-express-tamil/media/media_files/2024/10/24/ZLYGkCY3mf912wCx7AvY.jpg)
பொது இடங்களில் குப்பை கொட்டும் நபர்களைக் கண்காணிக்க ஏ.ஐ தொழில்நுட்பத்துடன் கூடிய சிசிடிவி கேமராக்களை பொருத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் பொது இடங்களில் விதிகளை மீறி குப்பைகள் கொட்டப்படுவது தொடர்பாக புகார்கள் எழுந்து வருகிறது. சென்னையில் சில இடங்களில் நீண்ட நாட்களாக தேங்கிக் கிடக்கும் குப்பைகள் பேருந்து வழித்தட சாலைகளிலும் நடைபாதைகளிலும் கிடப்பதால் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படுகிறது.
அதோடு, துர்நாற்றமும் வீசுவதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில், விதிகளை மீறி சாலை, பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவதை ஏ.ஐ தொழில்நுட்பத்துடன் கூடிய சிசிடிவி கேமராக்களை பொருத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இதன் மூலம் கண்காணித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சியின் ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார். சென்னையில் கடந்த 10 நாட்களில் விதிகளை மீறி குப்பை கொட்டியவர்களிடம் இருந்து 17.96 லட்சம் ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டிருப்பதாக ஆணையர் தெரிவித்தார்.
மேலும், அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 2.25 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார். இந்த ஏ.ஐ கேமராக்கள் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் இயங்கக்கூடிய ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்துடன் இணைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.