/indian-express-tamil/media/media_files/llcOAFguhS2TdBwC6lVV.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு எப்படி வழங்க முடியும் ? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருக்கும் இழப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சம் என்பது அதிகம் என்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இழப்பீட்டுத் தொகையை மறுபரிசீலனை செய்து குறித்து அரசின் கருத்தை தெரிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட்ட இழப்பீடு தொகையை எதிர்த்து முகமது கோஸ் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன், நீதிபதி முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு, இவ்வளவு அதிக தொகையை எப்படி வழங்க முடியும் என்று கேள்வி எழுப்பி உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.