Advertisment

சனாதனம் நிலை நிறுத்தப்பட்டது எப்படி? தொல்லியல் அறிஞர் எ.சுப்பராயலு விளக்கம்

சோழர் காலத்தில் எத்தனை பிராமண ஊர்கள் இருந்தன என்ற புள்ளி விவரங்களைக் கூறிய அவர், பிராமணர்கள் ஏன் அரசர்களால் குடியேற்றப்பட்டார்கள்.

author-image
WebDesk
New Update
Sanathan
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருதுகள் வழங்கும் விழாவில் செம்மொழி ஞாயிறு விருதைப் பெற்ற தொல்லியலறிஞர் எ.சுப்பராயலு ஏற்புரையாற்றினார். தமிழ்ச் சமூகத்தில் சனாதனம் என்பது எப்படி சோழர் காலத்தில் நிலைபெற்றது என்பதை விளக்கிய அவரது உரை முக்கியமானது. 

Advertisment

கல்வெட்டுகள் பெரும்பாலும் கோயில்களில்தான் வெட்டப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இன்று இருக்கும்  ஏராளமான கோயில்கள் பக்தர்களுக்கு ஆறுதலைத் தருவதாகக் கருதப்படுகின்றன. அது மட்டுமின்றி இந்தக் கோயில்கள் சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகளைக் காப்பாற்றுவதற்கும்கூடக் காரணமாக உள்ளன. கல்வெட்டுகளில் கிடைக்கும் செய்திகள் அரசர்களையும், அதிகாரம் உள்ளவர்களையும் பற்றித்தான் பெரும்பாலும் பேசுகின்றன. அவற்றில் சபால்டர்ன் என சொல்லப்படும் விளிம்புநிலை மக்களைப்பற்றி அவ்வளவாக செய்திகள் இல்லை.

இந்தத் தகவல்களை வைத்துக்கொண்டு நடுநிலையான வரலாற்றை எப்படி எழுதுவது என்பது வரலாற்றாசிரியர்களுக்கு மிகப்பெரிய சவால்என அவர் குறிப்பிட்டார். சோழர் காலத்தில் எத்தனை பிராமண ஊர்கள் இருந்தன என்ற புள்ளி விவரங்களைக் கூறிய அவர், பிராமணர்கள் ஏன் அரசர்களால் குடியேற்றப்பட்டார்கள். வருணக் கோட்பாட்டை நிலை நிறுத்தவே அவர்கள் அப்படிச் செய்தார்கள். பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் சனாதனக் கோட்பாடு பிராமணர்களால் அப்படித்தான் நிலை நிறுத்தப்பட்டது.

சனாதனம் என்பது இப்போது பிராமணர்களிடம் மட்டும் இல்லை, எல்லா சமூகத்தினரிடமும் உள்ளது. அதை அகற்றுவதற்கு ஒரு பெரியார் போதாது, பல பெரியார்கள் தேவைஎன அவர் குறிப்பிட்டார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment