தீட்சிதர்களால் விற்கப்பட்ட சிதம்பரம் நடராஜர் கோயில் நிலங்கள்; அறநிலையத்துறை ஐகோர்ட்டில் அறிக்கை

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான 2,000 ஏக்கர் நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்ததற்கான ஆதாரங்களுடன் இந்து சமய அறநிலையத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் வியாழக்கிழமை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான 2,000 ஏக்கர் நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்ததற்கான ஆதாரங்களுடன் இந்து சமய அறநிலையத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் வியாழக்கிழமை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Madras High Court Justice D Bharatha Chakravarthy question caste name in govt managing institution Tamil News

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான 2,000 ஏக்கர் நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்ததற்கான ஆதாரங்களுடன் இந்து சமய அறநிலையத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் வியாழக்கிழமை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த போது ஆண்டுக்கு ரூ. 3 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டிய நிலையில், தீட்சிதர்களின் கட்டுப்பாட்டுக்கு வந்தபிறகு, ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் மட்டுமே வருமானம் ஈட்டி வருவதால் கோயில் வரவு செலவு கணக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி இந்து அறநிலையத்துறை ஆணையர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். 

Advertisment

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், எஸ். சவுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, கடந்த செப்டம்பர் 19-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, இந்து அறநிலையத்துறை சார்பில்,  சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு 3 ஆயிரம் ஏக்கர் நிலம் இருந்த நிலையில், அதில் 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் அவர்கள் இஷ்டப்படி தனி நபர்களுக்கு விற்பனை செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், கோயிலுக்கு சொந்தமாக தற்போது எவ்வளவு ஏக்கர் நிலம் உள்ளது என்பது குறித்து வட்டாட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். அத்துடன் கோயிலுக்கு சொந்தமான 2 ஆயிரம் ஏக்கர் நிலங்களை தீட்சிதர்கள் தனிநபர்களுக்கு விற்பனை செய்தது தொடர்பான விவரங்களை ஆவணங்களுடன் அறிக்கையாக தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (அக்டோபர் 24) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலையத்துறை, சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான 2000 ஏக்கர் நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்ததற்கான ஆதாரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்தது.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai High Court

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: