கோவை ராமநாதபுரம் பகுதியில் பிளாஸ்டிக் பையில் மனித எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
/indian-express-tamil/media/media_files/Cb7mdmJL4guiSQBZPQaq.jpeg)
கோவை ராமநாதபுரத்தை அடுத்த சுங்கம் பகுதியில் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகே மனித எலும்புகள் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் , அங்கு மனித மண்டை ஓடு, எலும்புக் கூடுகள் இருப்பதை உறுதி செய்தனர்.
/indian-express-tamil/media/media_files/MFx425ZwZhJ47OTZA5uO.jpeg)
எலும்புக் கூடுகளை கைப்பற்றி விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த எலும்புக் கூடுகளை மருத்துவ மாணவர்கள் பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்துள்ளனரா? அல்லது கொலை சம்பவம் ஏதேனும் நடைபெற்றுள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“