Advertisment

கோவையில் மனித எலும்புகள் கண்டெடுப்பு: போலீசார் தீவிர விசாரணை

கோவை ராமநாதபுரத்தில் மண்டை ஓடு கிடப்பதாக பொது மக்கள் தகவல் தெரிவித்த நிலையல் அது மனித எலும்புகள் என போலீசார் உறுதி செய்தனர்.

author-image
WebDesk
New Update
Cbe bone.jpg

கோவை ராமநாதபுரம் பகுதியில் பிளாஸ்டிக் பையில் மனித எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisment

Cbe bone2.jpg

கோவை ராமநாதபுரத்தை அடுத்த சுங்கம் பகுதியில் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகே மனித எலும்புகள் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் , அங்கு மனித மண்டை ஓடு, எலும்புக் கூடுகள் இருப்பதை உறுதி செய்தனர்.  

Cbe bone1.jpg

எலும்புக் கூடுகளை கைப்பற்றி விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த எலும்புக் கூடுகளை மருத்துவ மாணவர்கள் பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்துள்ளனரா? அல்லது கொலை சம்பவம் ஏதேனும் நடைபெற்றுள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தி: பி.ரஹ்மான்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment