Advertisment

டெங்கு கொசுவுக்கு அதிகாரிகள் தான் காரணம்! - சென்னை உயர்நீதிமன்றம்

மனிதத் தவறுகளின் சங்கிலித் தொடர் பாதிப்பு தான் டெங்கு கொசு பிரச்னைக்கு முக்கிய காரணம் எனவும் நீதிபதி தன் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
டெங்கு கொசுவுக்கு அதிகாரிகள் தான் காரணம்! - சென்னை உயர்நீதிமன்றம்

விதிமீறல் கட்டிடங்களால் தண்ணீர் தேங்கி, டெங்கு கொசுக்கள் பரவுகின்றன. இந்த கொசுக்களின் உற்பத்திக்கு மனிதனே காரணம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Advertisment

தமிழகத்தில் டெங்கு நோய்க்கு ஏராளமானவர்கள் பலியானதைத் தொடர்ந்து, மருத்துவமனைகள், உணவகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், தொழிற் சாலைகள் உள்ளிட்ட இடங்களில் சுத்தமில்லாமல் கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்தால், அவற்றின் உரிமையாளர்களுக்கு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் அபராதம் விதித்து வருகின்றன.

இந்த வகையில், சேலம் மாநகராட்சியில் உள்ள சண்முகா மருத்துவமனை மற்றும் சேலம் கேன்சர் மருத்துவமனை ஆகிய இரு தனியார் மருத்துவமனைகளுக்கு போதிய சுகாதாரத்துடன் இல்லை என தெரிவித்தும், டெங்கு கொசு உற்பத்திற்கு ஏற்ற வகையில் மருத்துவமனை வளாகம் இருப்பதாக கூறி 10 லட்சம், 15 லட்சம் ரூபாய் என அபராதம் விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து அந்த இரு மருத்துவமனை நிர்வாகிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில் தங்களுக்கு போதிய வாய்ப்பு அளிக்காமலும் எங்கள் தரப்பு கருத்தை அறியாமல் மாவட்ட நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது. எனவே இதனை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தனர்.

இந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் விசாரித்தார். அப்போது, மருத்துவமனையை ஆய்வு செய்து, குறைகளை சுட்டிக் காட்டி, அவற்றை நிவர்த்தி செய்ய அவகாசம் வழங்காமல் நேரடியாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

சேலம் மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், டெங்கு கொசு உற்பத்தி போன்ற நோய்யை பரப்பும் வகையில் இருப்பதால் தான் அபராதம் விதிக்கபட்டது. இது போன்ற அபராதம் வதிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது என தெரிவித்தார்.

இரு தரப்பு வாதத்திற்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதி, இரு மருத்துவ மனைகளுக்கும் அபராதம் விதித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தார். மேலும், இந்த உத்தரவு கிடைத்த 24 மணி நேரத்தில் மருத்துவமனைகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி குறைகள் இருப்பினும் குறைகளை சுட்டிக் காட்ட வேண்டும். பின்னர், அது குறித்து நோட்டீஸ் அனுப்பிய பிறகும் அதை நிவர்த்தி செய்யாவிட்டால் அதிகாரிகள் அபராதம் விதிக்கலாம் எனவும் நீதிபதி வைத்தியநாதன் உத்தரவு பிறப்பித்தார்.

இது போன்ற நிகழ்வுகளுக்கு விதிமீறல்களை அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் தான் காரணம், இதனால் மழை நீர் பூமிக்குள் இறங்க முடியாமல் தேங்கி, கொசுக்கள் உற்பத்திக்கு வழி வகுக்கின்றன. மனிதத் தவறுகளின் சங்கிலித் தொடர் பாதிப்பு தான் டெங்கு கொசு பிரச்னைக்கு முக்கிய காரணம் எனவும் நீதிபதி தன் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment