/indian-express-tamil/media/media_files/2024/11/20/HPacvtGkPykT3gyQAIxh.jpg)
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பூலாங்குடி பழங்கனாங்குடி சாலை ஹேப்பி நகரை சேர்ந்தவர் ராஜேந்திர பிரசாத் (56) இவரது மனைவி ஹேமா பிந்து (50). இவர்களுக்கு குணசேகர் (20), குருசாமி (20) என இரு மகன்கள் உள்ள நிலையில், இருவரும் பொறியியல் படித்து வருகின்றனர். மகள் ஹர்சினி தனியார் மருத்துவ நிறுவனத்தில் மருத்துவராக வேலை பார்த்து வருகிறார்.
இவர்கள் அனைவரும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் ஹேமா பிந்துவிற்கு பக்தி மார்க்கம் அதிகமாக இருந்துள்ளது. இதனால் அடிக்கடி வீட்டில் அமர்ந்து பூஜை அறையில் சாமி கும்பிடுவது வழக்கமாக கொண்டிருந்தார். இது ராஜேந்திரபிரசாத்திற்கு பிடிக்காமல் போய் உள்ளது. இதனிடையே நேற்று இரவு 11 மணி அளவில் ஹேமா பிந்து சாமி கும்பிட்டுக் கொண்டு இருந்ததை பார்த்து ஆத்திரம் அடைந்த ராஜேந்திர பிரசாத் வீட்டில் வாகனத்திற்காக வைத்திருந்த பெட்ரோலை எடுத்து அவர்களின் மீது ஊற்றி உள்ளார்.
அப்போது சாமி அறையில் எரிந்து கொண்டிருந்த தீப விளக்கில் பெட்ரோல் பட்டு அவர்கள் மீது தீ பரவி உள்ளது. இதில் ஹேமா பிந்து மீது தீ பரவியதால், அவரைக் காப்பாற்ற முயன்ற மகன்கள் குணசேகர், குருசாமி ஆகியோருக்கு சிறிய அளவில் தீக்காயமும், பெட்ரோலை வீசிய ராஜேந்திர பிரசாத்திற்கு பெரிய அளவில் தீக்காயமும் ஏற்பட்டுள்ளது. தீக்காயம் அடைந்த நான்கு பேரையும் வீட்டிலிருந்தவர்கள் வீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் ஹேமா பிந்தவும், ராஜேந்திர பிரசாத் ஆபத்தான நிலையில் உள்ளனர். இச்சம்பவம் குறித்து நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us