ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம்: தமிழகத்தில் மூன்று இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது.
தமிழகம் உட்பட நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க இன்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மூன்று இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க கையெழுத்தானது. வேதாந்தா குழுமத்திற்கு இரண்டு இடமும், ஓ.என்.ஜி.சிக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.