/indian-express-tamil/media/media_files/YTAFrTI7IAJYV3XFykIH.jpeg)
ஐ.சி.எஃப் தொழற்சாலை சென்னையில் செயல்பட்டுவருகிறது.
சென்னை ஐ.சி.எஃப் நிறுவனம் 1955ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அந்த நிறுவனம் இதுவரை 75 ஆயிரம் ரயில் பெட்டிகளை வரை தயாரித்து சாதனை படைத்துள்ளது. இந்நிறுவனம் கடந்த 2022ஆம் ஆண்டு 70ஆயிரமாவது ரயில் பெட்டியை தயாரித்தது.
இந்த நிலையில், சுமார் ஒன்றரை ஆண்டுக்குள் 5 ஆயிரம் பெட்டிகள் வரை தயாரித்துள்ளது.
இந்தப் பெட்டிகள் இலங்கை, அங்கோலா, தான்சானியா, வங்கதேசம், பிலிப்பைன்ஸ், வியட்நாம் மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது.
கடந்த காலங்களில் இங்கு ஆண்டுக்கு 75 பெட்டிகள் தயாரிக்கப்பட்டன. தற்போது, ஆண்டுக்கு 3 ஆயிரம் ரயில் பெட்டிகள் வரை தயாரிக்கப்படுகிறது.
இந்தப் பெட்டிகளில் 875 ரயில் பெட்டிகள் வரை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தத் தகவல்கள் ஐ.சி.எஃப் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.