கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கொல்லிமலை கீழ்பாதி என்ற கிராமத்தில் முகம்மது அப்சர் என்பவரின் வீட்டு கட்டுமான பணிகள் நடைபெற்றது. அப்போது அஸ்திவாரத்திற்காக நிலத்தை தோண்டியதில் பழங்கால சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
அந்த வகையில், சுமார் மூன்று அடி உயரம் கொண்ட நடராஜர் சிலை, சிதைந்த நிலையில் திருவாச்சி, அஸ்தி தேவர் சிலைகள் மற்றும் 1 அடி பிரதோஷ நந்தி வாகனம் உள்ளிட்ட ஐம்பொன் உலோகத்தால் ஆன சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
இதையடுத்து, கண்டெடுக்கப்பட்ட சிலைகள் அனைத்தும் போலீசாரின் பாதுகாப்போடு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. மேலும், அப்பகுதியில் வேறு ஏதேனும் சிலைகள் இருக்கிறதா என்று கண்டறியும் பணிகளையும் அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.