வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு தராவிட்டால் மிகப் பெரிய போராட்டம் வெடிக்கும்: ராமதாஸ் எச்சரிக்கை

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு தராவிட்டால் மிகப் பெரிய போராட்டம் வெடிக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு தராவிட்டால் மிகப் பெரிய போராட்டம் வெடிக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
ராமதாஸ்

தமிழகத்தில் வன்னிய மக்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு தரவில்லை என்றால் நான் வன்னிய சங்கத்துடன் இணைந்து ஈடுபடும் மிகப்பெரிய போராட்டத்தை தமிழக அரசு சந்திக்கும் என்று இன்று தைலாபுரம் தோட்டத்தில் அவசரமாக  கூட்டிய பத்திரிகையாளர் சந்திப்பில் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.

Advertisment

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, "சென்ற வாரம் வியாழக்கிழமை பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.
அப்பொழுது நீங்கள் கேட்ட கேள்விக்கு நான் சரியாக பதில் சொல்லவில்லை. அது எனக்கு திருப்தியாகவும் இல்லை உடனடியாக தான் இன்று திங்கட்கிழமை இந்த அவசரமான பத்திரிகையாளர் சந்திப்பை கூட்டி உள்ளேன்.

வதந்திகளை பரப்பும்  ஊடகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். 20.6.1980 ஆண்டு வன்னியர் சங்கம் துவங்கப்பட்டது. அப்பொழுது முதல் வன்னியர் மக்களுக்கு 20 விழுக்காடு வாங்கி கொடுத்த திருப்தி இந்த சங்கத்திற்கு உண்டு. அதேபோன்று 10.5 சதவீதம் இட ஒதுக்கீடை வன்னிய மக்களுக்கு பெற்றுத் தருவதில் வன்னியர் சங்கத்துடன் இணைந்து தமிழ்நாட்டில் தமிழக அரசிற்கு எடுத்துரைத்து பத்து புள்ளி ஐந்து சதவீதம் இட ஒதுக்கிடை வலியுறுத்துவோம்.

அப்படி தரவில்லை என்றால் வன்னியர் சங்கமும் நானும் சேர்ந்து நடத்தும் மிகப்பெரிய போராட்டத்தை தமிழக அரசு சந்திக்கும். வன்னியர் சங்க முதல் மாநாடு ஈரோடு கருங்கல்பாளையத்தில் நடந்தது. இரண்டாவது மாநாடு மேட்டூரில் நடந்தது. அப்போது எஸ்.எஸ் ராமசாமி படையாட்சியாரை ரகத்தில் அமர வைத்து 16 கிலோமீட்டர் நான் நடந்தே சென்று வன்னிய மக்களுக்காக அழகு பார்த்தேன்.

Advertisment
Advertisements

எஸ் எஸ் ராமசாமி படையாச்சி என்னை ரதத்தில் உட்கார வைக்க எவ்வளவு முயற்சி எடுத்தார். நான் உட்காராமல் நடந்தே வந்தேன் இன்னும் சொல்லப்போனால் ரதத்தை இழுத்தே வந்தேன் என்று சொல்லலாம்.
அது போன்று வன்னிய மக்களுக்காக நல்லது கெட்டது எல்லாம் ஆராய்ந்து பார்த்து இந்த வன்னியர் சங்கத்தை  ஆரம்பித்தோம்.

அதேபோன்று தமிழகத்தில் 10. 5 சதவீத இட ஒதுக்கீடு தரவில்லை என்றால் வன்னியர் சங்கத்துடன் இணைந்து மாநில தலைவர் பூ தா அருள்மொழி தலைமையில் மாவட்டம் தோறும் கடுமையான போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் என்னையும் அழைத்துள்ளார் நானும் அதில் கலந்து கொள்வேன் என்றும் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.

செய்தி: பாபு ராஜேந்திரன் - திண்டிவனம்

Ramadoss

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: