/indian-express-tamil/media/media_files/BzzvSjvUNZHZxEQZ58Nh.jpeg)
Coimbatore
நிதி நிறுவன மோசடி தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஐ.ஜி. பிரமோத்குமார் கோவை சிபிஐ நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.
திருப்பூர் பாசி நிதி நிறுவனத்தின் பெண் இயக்குநர் கமலவள்ளியை கடத்தி பணம் பறித்ததாக அப்போதைய மேற்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த பிரமோத் குமார் உட்பட 5 பேர் மீது சிபிஐ கடந்த 2011 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது.
கோவை இரண்டாவது கூடுதல் சிபிஐ நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரனை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில்குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யபட்ட நிலையில் இன்று குற்றசாட்டு பதிவு நடைபெறுவதால், ஐ.ஜி பிரமோத்குமார் உட்பட5 பேரும் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர்.
இதனிடையே, ஐ.ஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு இன்றுவிசாரணைக்கு வருவதாக கோவை சிபிஐநீதிமன்றத்தில், ஐஜி தரப்பு வழக்கறிஞர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து வழக்கு விசாரணையை பிற்பகலுக்கு மேல் கோவை இரண்டாவது கூடுதல் சிபிஐ நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜன் ஒத்தி வைத்தார்.
பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.