சென்னை ஐஐடி வளாகத்தில் பரபரப்பு... பேராசிரியை விஷம் குடித்து தற்கொலை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
iit professor suicide, ஐஐடி பேராசிரியை தற்கொலை

iit professor suicide, ஐஐடி பேராசிரியை தற்கொலை

சென்னை கோட்டூர்புரத்தில் ஐஐடி பேராசிரியை தற்கொலை செய்து கொண்டது சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சென்னை ஐஐடி கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக பணியாற்றி வந்தவர் அதிதி சிம்ஹா. இவருக்கு வயது 45. தனது கணவரைப் பிரிந்த இவர், சமீபக் காலமாகவே கடும் மனவேதனையில் இருந்து வந்தார்.

ஐஐடி பேராசிரியை தற்கொலை

இந்நிலையில், அவர் திடீரென விபரீத முடிவை தேடிக் கொண்டார். கல்லூரி வளாகத்தில் விஷ விதையை அரைத்துக் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த அதிதியை உறவினர்கள் மற்றும் அருகில் இருந்தவர்கள் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து, அவரது உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கோட்டூர்புரம் போலீசார் அனுப்பிவைத்தனர். பேராசிரியர் அதிதி சிம்ஹாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அவர் மன உளைச்சலில் இருந்ததாகவும், அதன் காரணமாகவே இந்த முடிவை தேடிக் கொண்டிருக்கலாம் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

Iit Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: