பி.எச்.டி மாணவர் சச்சின் குமார் ஜெயின் தற்கொலைக்கு காரணமான பேராசிரியர் ஆசிஷ்குமார் சென் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த மார்ச் 31ம் தேதி ஆராய்ச்சி மாணவர் சச்சின் குமார் ஜெயின் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பேராசிரியர் ஆசிஷ்குமார் சென் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஏப்ரல் மாதம் ஆராய்ச்சி மாணவர் சச்சின் குமார் ஜெயின், சென்னை ஐஐடி மெட்ராஸ் வளாகத்திற்குள் தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலைக்கு பேராசிரியர் ஆதித்யா சென்தான் காரணம் என்று மாணவர்கள் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி திலகவதி தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு இது தொடர்பாக விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் இந்த குழு நடத்திய விசாரணையில் அடிப்படையில் பேராசியர் ஆசிஷ்குமார் சென் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“