”தேசம் காப்போம் - தமிழை வளர்ப்போம்" இந்திய ஜனநாயக கட்சி மாநில மாநாடு இன்று (மார்ச் 2) திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை, சிறுகனூர் பகுதியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் ஐஜேகே கட்சியின் முக்கிய பிரமுகர்கள் திரளாக பங்கேற்கின்றனர்.
இந்த மாநாடு காரணமாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்தில் காவல்துறை பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது. இது குறித்த விபரம் வருமாறு;
போக்குவரத்து வழித்தட மாற்றம்: அனைத்து கனரக வாகனங்கள்
சென்னையிலிருந்து திண்டுக்கல் நோக்கி செல்லும், அனைத்து கனரக வாகனங்களும் பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் பைபாஸ் ரோடு வழியாக துறையூர், முசிறி, குளித்தலை, மணப்பாறை, வையம்பட்டி வழியாக செல்ல வேண்டும்.
சென்னையிலிருந்து மதுரை நோக்கி செல்லும், அனைத்து கனரக வாகனங்களும் பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் பைபாஸ் ரோடு வழியாக துறையூர், முசிறி, குளித்தலை, மணப்பாறை, புத்தாநத்தம், துவரங்குறிச்சி வழியாக செல்ல வேண்டும்.
மதுரையிலிருந்து சென்னை நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்களும், விராலிமலை வழியாக மணப்பாறை, குளித்தலை, முசிறி, துறையூர், பெரம்பலூர் வழியாக செல்லவேண்டும்.
சென்னையிலிருந்து கரூர் நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்களும், பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் பைபாஸ் ரோடு வழியாக துறையூர், முசிறி, குளித்தலை, கரூர் சென்று வரவேண்டும்.
கரூரிலிருந்து தஞ்சாவூர் செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் குளித்தலை, முசிறி, துறையூர், பெரம்பலூர், அரியலூர், கீழப்பழூர், திருமானூர், திருவையாறு வழியாக தஞ்சாவூர் சென்று வரவேண்டும்.
மேலும், சேலத்திலிருந்து தஞ்சாவூர் நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் மேய்க்கல்நாயக்கன்பட்டி, தொட்டியம், முசிறி, துறையூர், பெரம்பலூர், அரியலூர், கீழப்பழூர், திருமானூர், திருவையாறு வழியாக தஞ்சாவூர் சென்று வரவேண்டும்.
சென்னையிலிருந்து ராமநாதபுரம் நோக்கி செல்லும், அனைத்து கனரக வாகனங்களும் பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் பைாபாஸ் ரோடு வழியாக குன்னம், அரியலூர், கீழப்பழூர், புள்ளம்பாடி, கொள்ளிடம் "Y" ரோடு, திருச்சி பால்பண்ணை, திருவெறும்பூர், துவாக்குடி ரிங்க் ரோடு, கும்பக்குடி ஜங்சன், கீரனூர் வழியாக சென்று வரவேண்டும்.
மேலும், தஞ்சாவூரிலிருந்து மதுரை நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் துவாக்குடி டோல்பிளாசா, துவாக்குடி ரிங் ரோடு, பஞ்சப்பூர், மதுரைரோடு, விராலிமலை, வளநாடு கைகாட்டி, துவரங்குறிச்சி வழியாக சென்று வரவேண்டும்.
தஞ்சாவூரிலிருந்து திண்டுக்கல் நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் துவாக்குடி டோல்பிளாசா, துவாக்குடி ரிங் ரோடு, பஞ்சப்பூர், மதுரைரோடு, விராலிமலை, மணப்பாறை ரோடு, மணப்பாறை அரசு மருத்துவமனை, வையம்பட்டி வழியாக சென்று வரவேண்டும்.
அனைத்து இலகுரக வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்கள்:
சென்னையிலிருந்து மதுரை நோக்கி செல்லும் அனைத்து இலகுரக வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்களும், பாடாலூர், தச்சங்குறிச்சி, பூவாளூர், கொள்ளிடம் "Y" ரோடு, திருச்சி வழியாக செல்லவேண்டும்.
சென்னையிலிருந்து திண்டுக்கல் நோக்கி செல்லும் அனைத்து இலகுரக வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்களும், பாடாலூர், தச்சங்குறிச்சி, பூவாளூர், கொள்ளிடம் "Y" ரோடு, திருச்சி வழியாக செல்லவேண்டும்.
மதுரையிலிருந்து சென்னை நோக்கி செல்லும் அனைத்து இலகுரக வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்களும், கொள்ளிடம் "Y" ரோட்டில் திருப்பிவிடப்பட்டு, நொச்சியம், மண்ணச்சநல்லூர், துறையூர், பெரம்பலூர் வழியாக செல்லவேண்டும்.
திண்டுக்கலிலிருந்து சென்னை நோக்கி செல்லும் அனைத்து இலகுரக வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்களும், கொள்ளிடம் "Y" ரோட்டில் திருப்பிவிடப்பட்டு, நொச்சியம், மண்ணச்சநல்லூர், துறையூர், பெரம்பலூர் வழியாக செல்லவேண்டும்.
மேற்கண்டவாறு திருச்சி மாநகர, மாவட்ட காவல் துறை நிர்வாகம் போக்குவரத்தில் மாற்றம் செய்துள்ளது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“