ilavarasi release sasikala sister ilavarasi : சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவின் உறவினர் இளவரசி இன்று விடுதலையாகிறார்.
தண்டனைக் காலம் நிறைவடைந்ததையடுத்து இன்று காலை 11 மணிக்கு அவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட உள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு சசிகலா, அவரது அண்ணி இளவரசி, சுதாகர் உள்ளிட்ட மூவரும் சிறைக்கு சென்றனர். பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்ட அவர்களுக்கு 4 ஆண்டு கால சிறைவாசம் முடிவுக்கு வந்துள்ளது. இதில் சசிகலா கடந்த 27ம் தேதி விடுதலையானார். இந்நிலையில், இளவரசிக்கு விதிக்கப்பட்ட 10 கோடி ரூபாய் அபராதத் தொகையை அவர் ஏற்கெனவே செலுத்தியிருந்தார்.
கடந்த 23ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளவரசி 2ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மீண்டும் பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் தனிமையில் வைக்கப்பட்டார் .
இளவரசியின் தண்டனை காலம் இன்றுடன் நிறைவடைவதாக சிறைத்துறை தெரிவித்துள்ளது. இதனால் அவர் இன்று காலை 11 மணியளவில் விடுதலையாகிறார்.