/indian-express-tamil/media/media_files/YaKSdu8DszaeMfgRS1WJ.jpg)
கலெக்டர்கள் ஆஜராக ஐகோர்ட் தடை; சுப்ரீம் கோர்ட்டில் இ.டி மேல்முறையீடு
சட்ட விரோத மணல் விற்பணை பற்றி விசாரணைக்கு ஆஜராகுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் சட்ட விரோதமாக மணல் விற்பனை செய்யப்படுவதாக குற்றம் சாட்டி அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. மணல் குவாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர்களே பொறுப்பு என்பதல், சட்ட விரோத மணல் விற்பனை பற்றி விசாரணை நடத்துவதற்காக, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
அமலாக்கத்துறை மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பியதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில், மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்ப அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என்று வாதிட்டது.
இதையடுத்து, 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவில் தவறு உள்ளது என்றும் அதனால், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடைவிதிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.