/indian-express-tamil/media/media_files/2024/10/31/V7UbUiFkIK3Xp7vJ44Lu.jpg)
தமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் நவம்பர் 7 -11-ம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நவம்பர் முதல் வார இறுதியில் தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகிறது என்றும் இந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி தீவிரமடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் நவம்பர் 7 -11-ம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது, “நவம்பர் முதல் வார இறுதியில் தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த நிலை, காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு இருக்கிறது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடையும் பட்சத்தில், நவம்பர் இரண்டாம் வாரமான 7ஆம் தேதி 11 தேதி தமிழகத்தில் மிக கனமழை பொழிய வாய்ப்பு இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே, நவம்பர் மாதம் முழுவதும் தொடர்ச்சியாக மழை பொழியும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது என்றும் அது தமிழகத்தை நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழையில் டானா புயல், உருவாகியிருந்தாலும்கூட தமிழகத்தில் எந்தவித தாக்கமும் ஏற்படவில்லை. ஆனால், இனி வரும் நாட்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழகத்தில் அதிகப்படியான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.