திருவள்ளூர், ராணிப்பேட்டைக்கு ரெட் அலர்ட்; 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் - வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 2 மாவட்டங்களில் புதன்கிழமை அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 2 மாவட்டங்களில் புதன்கிழமை அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

author-image
WebDesk
New Update
imd rain 2

அதேபோல், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர்,திருப்பத்தூர்,கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய 9 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. 

Advertisment

இந்நிலையில், திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதனால், இந்த 2 மாவட்டங்களில் 20.4 செ.மீ.க்கு மேல் மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் சேலம் ஆகிய 9 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த மாவட்டங்களில் 11.5 செ.மீ முதல் 20.4 செ.மீ வரை மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது.

அதே போல, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சி, ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான யெல்லோ அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த மாவட்டங்களில் 6.4 செ.மீ முதல் 11.5 செ.மீ. வரை மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Advertisment
Advertisements

முன்னதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டில் மழை பொழிவு குறித்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று காலை, 5:30 மணிக்கு ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. காலை 8:30 மணியளவில், இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, அதே பகுதியில் நிலவியது. இந்த சூழல், இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தை ஒட்டி நகர்ந்தது. அடுத்த 12 மணி நேரத்தில், தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடலில், வட மாவட்டங்கள், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அப்பால், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும்,  “வட தமிழகம், புதுச்சேரி வழியே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் வாய்ப்பு இல்லை இதே சமயத்தில், தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்று நிலவுகிறது. இது, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுமா என்பதை வானிலை மையம் கண்காணித்து வருகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில், ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுகிறது. தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரியிலும் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த ஏழு நாட்களுக்கு, தமிழகத்தில் மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது” என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மீனவர்களுக்கான எச்சரிக்கை

22-10-2025 & 23-10-2025: வட தமிழக கடலோரப் பகுதிகள், தென் ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் புதுச்சேரி: மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையே 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகள்: மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

24-10-2025 & 25-10-2025: தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில்: மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

22-10-2025: தென் ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல்: மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையே 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். தென்மேற்கு, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல், ஏனைய தென் ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகள்: மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

23-10-2025: தென் ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல்: மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையே 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். தென் மற்றும் மத்திய வங்கக்கடலின் அநேகப் பகுதிகள், ஏனைய தென் ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகள்: மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

24-10-2025 & 25-10-2025: தென் -மத்திய வங்கக்கடலின் அநேகப் பகுதிகள், தென் ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில்: மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

22-10-2025: தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள்: மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையே 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். கேரள – கர்நாடக கடலோரப் பகுதிகள், இலட்சத்தீவு - மாலத்தீவு பகுதிகள், ஏனைய தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய அரபிக்கடல் பகுதிகள்: மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

23-10-2025: கேரள – கர்நாடக கடலோரப் பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், தென்மேற்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகள், இலட்சத்தீவு - மாலத்தீவு பகுதிகளில்: மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

24-10-2025 & 25-10-2025: கேரள – கர்நாடக கடலோரப் பகுதிகள், இலட்சத்தீவு - மாலத்தீவு பகுதிகள், தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் அரபிக்கடலின் சில பகுதிகளில்: மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்கூறிய நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனே கரைக்குத் திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Tamil Nadu rain

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: