அரபிக்கடலில் உருவான 'சக்தி' புயல்... தமிழ்நாட்டில் இடியுடன் கூடிய கனமழை; இந்த மாவட்டங்கள் அலர்ட்

சென்னையைப் பொறுத்தவரை, ஓரிரு பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும், சில சமயங்களில் தீவிரமடையலாம் என்றும், அத்துடன் இடி மின்னலும் இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை, ஓரிரு பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும், சில சமயங்களில் தீவிரமடையலாம் என்றும், அத்துடன் இடி மின்னலும் இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

author-image
WebDesk
New Update
TN Rain Update

அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்துள்ள நிலையில், இதற்கு சக்தி புயல் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது தீவிர புயலாக மாறக்கூடும் என்று எச்சரித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD)  இன்று (அக்டோபர் 4), தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

Advertisment

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: 

அதன்படி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை, ஓரிரு பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும், சில சமயங்களில் தீவிரமடையலாம் என்றும், அத்துடன் இடி மின்னலும் இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வெப்பநிலை பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 32°C முதல் 33°C வரை இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை 24°C முதல் 25°C வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், தஞ்சாவூர், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல்ஈ கடலூர், அரியலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மழைப்பொழிவு எதிர்பார்க்கப்படும் பகுதிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேர வானிலை நிலவரப்படி, நேற்று (அக்டோபர் 3), ஓரிரு இடங்களில் மழை பதிவானது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

Advertisment
Advertisements

தமிழகத்தில் அதிகபட்சமாக 39.5°C வெப்பநிலையை பாளையங்கோட்டை பதிவு செய்தது. சமவெளிப் பகுதிகளில் குறைந்தபட்சமாக 22.5°C வெப்பநிலையை கரூர் பரமத்தி பதிவு செய்தது. தமிழகத்தில் நேற்று மதியம் வரை பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், அதன்பிறகு மழை பெய்ய தொடங்கியது. அதில், திண்டுக்கல், விருதுநகர், கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்த நிலையில், சென்னையில்,இன்று காலையில் பல பகுதிகளில் லேசான மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: