/tamil-ie/media/media_files/uploads/2022/11/rain.jpg)
தமிழ்நாட்டில் டிச.8ஆம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு.
வங்கக் கடலில் திங்கள்கிழமை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ள நிலையில், டிச.8ஆம் தேதி தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. முன்னதாக, தென்கிழக்கு கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் இன்று (டிச.4) வளிமண்டல சுழற்சி ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளன. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும்.
மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்பட்சத்தில், டிச.8ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பெரும்பாலான இடங்களில் மிக கனமழை பெய்யக் கூடும்.
ஏற்கனவே டிச.7ஆம் தேதி தமிழ்நாட்டில் பரவலாக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்த நிலையில், டிச.8ஆம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.