மக்களவை பாதுகாப்பு மீறலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இடைநீக்கம் செய்யப்பட்டவர்களின் பட்டியலில் இருந்து திமுக லோக்சபா எம்பி எஸ்ஆர் பார்த்திபனின் பெயரை நாடாளுமன்றம் வியாழக்கிழமை (டிச.14,2023) நீக்கியது. அந்த நேரத்தில் அவர் சபையில் கூட இல்லை என்று எம்.பி முன்பு கூறியிருந்தார்.
பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், உறுப்பினரை அடையாளம் காண்பதில் ஊழியர்கள் தவறு செய்ததால் பார்த்திபன் பெயர் வந்துள்ளது என்றார்.
இது குறித்து ஜோஷி, "தவறான அடையாளம் காரணமாக உறுப்பினரின் பெயரை கைவிடுமாறு சபாநாயகரிடம் கேட்டுக் கொண்டேன்" என்றார். இதற்கு சபாநாயகர் ஒப்புதல் அளித்துள்ளார்.
வியாழன் மாலை தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய சேலம் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் எஸ் ஆர் பார்த்திபன், எதிர்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்கம் பட்டியலில் தனது பெயர் பட்டியலிடப்பட்டது ஒரு "நகைச்சுவை" என்று கூறினார்.
மேலும், "தனக்கு உடல்நிலை சரியில்லாததால் நான் இன்று அங்கு இல்லை," என்று கூறினார்.
இதற்கிடையில், தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியின் திமுக எம்பி செந்தில்குமார், திமுகவின் பார்த்திபன் அப்போது மக்களவையில் இல்லை. ஆனால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் பட்டியலில் தனது பெயரை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வாசித்தார். நிர்வாகத்தின் மொத்த கேலிக்கூத்து இது” என்றார்.
காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரமும், பார்த்திபன் இன்று லோக்சபாவில் இல்லை என்பதால், "இந்த இடைநீக்கத்தில் நகைச்சுவை இருக்கிறது" என்றார்.
பார்த்திபன் சட்டம் மற்றும் விவசாய பின்னணி கொண்டவர், மேலும் 2019 இல் கணிசமான அளவு 1.46 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மேலும், கடன் தள்ளுபடிகள், நியாயமான விலை நிர்ணயம் மற்றும் மேம்பட்ட வேலை நிலைமைகள் போன்ற பிரச்சினைகளை எழுப்புவதில் அவர் பெயர் பெற்றவர் ஆவார்.
கல்வி, சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற துறைகளிலும் ஆர்வம் காட்டுவார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்த இவர், 2019ல் அப்போதைய முதல்வர் எடப்பாடி கே பழனிசாமியை அவதூறாகப் பேசியதாக வழக்கை சந்தித்தார். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் 2022ல் ரத்து செய்தது.
இந்த நிலையில், முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “திமுக எம்பி கனிமொழி உட்பட 15 எதிர்க்கட்சி எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது ஜனநாயக விரோதமானது மற்றும் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் உணர்வைக் குழிதோண்டிப் புதைக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.
ஆங்கிலத்தில் வாசிக்க : In initial suspension order, a DMK MP not present in House, on ‘sick leave’
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“