/tamil-ie/media/media_files/uploads/2023/08/tamil-indian-express-2023-08-22T150821.164.jpg)
தமிழ்நாட்டில் மழை வெள்ள நிவாரண தொகை டோக்கன் 16ஆம் தேதி அளிக்கப்படுகிறது.
udhayanidhi-stalin | தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “10 நாள்களில் நிவாரணத் தொகை முழுமையாக கொடுத்து முடிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “வெள்ள நிவாரணத்திற்காக மத்திய அரசு கொடுத்த நிதி தமிழ்நாட்டிற்கு போதுமானதாக இல்லை; வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத் தொகை டோக்கன் வரும் 16-ம் தேதி முதல் வழங்கப்படும்” என்றார்.
தொடர்ந்து, ரேஷன் கடைகள் மூலம் டோக்கன் வழங்கி நிவாரணத் தொகை வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் வெள்ளத்தால் கடும் சேதம் ஏற்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி தற்போது இயல்புநிலை மெல்லத் திரும்பி வருகிறது.
இந்நிலையில் மத்திய அரசு ரூ.5,060 கோடி நிதி உதவி அளிக்க வேண்டும் என மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார்.
தொடர்ந்து, மத்திய அரசு முதல்கட்டமாக ரூ.450 கோடி நிவாரணம் அளித்தது. இந்த நிலையில், தமிழக அரசு ரூ. 6000 வெள்ள நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.