6 மாத சம்பள பாக்கி: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் காலில் விழுந்து கெஞ்சிய பெண்!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் நூலக உதவியாளராக தற்காலிக பணியாற்றிய பெண், 6 மாத சம்பள நிலுவைத் தொகை வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரின் காலில் விழுந்து மன்றாடிய சம்பவம் அரங்கேறி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் நூலக உதவியாளராக தற்காலிக பணியாற்றிய பெண், 6 மாத சம்பள நிலுவைத் தொகை வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரின் காலில் விழுந்து மன்றாடிய சம்பவம் அரங்கேறி உள்ளது.

author-image
WebDesk
New Update
villupuram collector

6 மாத சம்பள பாக்கி: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் காலில் விழுந்து கெஞ்சிய பெண்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திண்டிவனம் அடுத்த கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சோலை மனைவி மாரியம்மாள் (49), திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் நூலக உதவியாளராக தற்காலிகமாக 6 மாதத்திற்கு முன்பு பணியில் அமர்த்தப்பட்டார். கடந்த 6 மாதமாக சம்பளம் எதுவும் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. தற்போது அவரை அந்த பணியில் இருந்து அதிகாரிகள் விட்டு நீக்கிவிட்டார்கள் எனவும் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த மாரியம்மாள் இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்திற்கு வந்தார். 

Advertisment

மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமானை நேரில் சந்தித்து, தனது கோரிக்கைகளை மனுவாக சமர்பித்தார். ஆட்சியரின் காலில் விழுந்து மன்றாடிய மாரியம்மாள்... ஐயா எனக்கு வேலையே வேண்டாம்... நான் வேலை செய்த 6 மாத சம்பளத்தை பெற்று தாருங்கள் என்று கண்ணீர்மல்க மனு அளித்தார். அவரிடம் இருந்து மனுவினைப் பெற்ற மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுப்பதாக கூறி அவர்களை அனுப்பி வைத்தார்.

Villupuram

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: