/tamil-ie/media/media_files/uploads/2022/07/Sasikala-I.jpg)
சென்னையில் ஒரு நிறுவனம் சசிகலா பினாமி பெயரில் வாங்கப்பட்டது என உச்ச நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டதையடுத்து வருமான வரித்துறையினர் 15 கோடி ரூபாய் மதிப்பிலான அந்த நிறுவனத்தை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும், அவரது தோழியான சசிகலாவுக்கும் சொந்தமான இடங்களில் கடந்த 2017ஆம் ஆண்டு வருமான வரித்துறை சோதனை நடத்தினார்கள். வருமான வரித்துறையின் சோதனையில், பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை வழக்குபதிவு செய்தது. அதன்படி, சசிகலாவுக்கு சொந்தமான சொத்துகளை வருமான வரித்துறை முடக்கி வருகிறது.
வருமான வரித்துறை கடந்த 2019ஆம் ஆண்டு மட்டும் சசிகலா தொடர்புடைய 1600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கியது.
இதைத் தொடர்ந்து, 2020ஆம் ஆண்டில், போயஸ் தோட்டம், தாம்பரம், சேலையூர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள 300 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கப்பட்டது. மேலும், வருமான வரித்துறை சிறுதாவூர் பங்களா, கோட நாடு எஸ்டேட் உள்ளிட்ட இடங்களில் சசிகலாவுக்கு சொந்தமான 2000 கோடி ரூபாய் சொத்துகளை முடக்கியது.
இதையடுத்து, கடந்த 2021 ஆம் ஆண்டில், சென்னையை அடுத்த பையனூரில் சசிகலாவுக்கு சொந்தமான 49 ஏக்கர் நிலம், பங்களா என 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை முடக்கி செய்து வருமான வரித்துறை நோட்டீஸ் ஓட்டியது.
இந்த நிலையில், அந்த வரிசையில், சென்னை தி நகர் பத்மநாபா தெருவில் உள்ள ஆஞ்சனேயா பிரிண்டர்ஸ் என்ற நிறுவனம், சசிகலா பினாமி பெயரில் வாங்கப்பட்டது என உச்சநீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, வருமான வரித்துறையினர் இன்று (ஜூலை 1) 15 கோடி மதிப்பிலான ஆஞ்சனேயா பிரிண்டர்ஸ் என்ற நிறுவனத்தை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.