ஜெயலலிதா அறையில் சோதனை நடத்தவில்லை : மௌனத்தைக் கலைத்த வருமான வரித்துறை

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் நடைபெற்ற சோதனை குறித்தும், வருமான வரித்துறை செவ்வாய் கிழமை விளக்கம் அளித்தது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் நடைபெற்ற சோதனை குறித்தும், வருமான வரித்துறை செவ்வாய் கிழமை விளக்கம் அளித்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
It raid, VK Sasikala, Jayalalithaa, TTV dhinakaran, Vivek Jayaraman

சசிகலா உறவினர்கள் இல்லங்கள் மற்றும் அலுவலகங்களிலும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் நடைபெற்ற சோதனை குறித்தும், வருமான வரித்துறை செவ்வாய் கிழமை விளக்கம் அளித்தது.

Advertisment

அந்த விளக்கத்தில் வருமான வரித்துறை தெரிவித்ததாவது,

- வரி ஏய்ப்பு தொடர்பாக பொருளாதார உளவுத்துறை மூலம் கண்காணித்து சோதனை நடத்தப்பட்டது.

- போயஸ் கார்டனில் சசிகலாவின் 4 அறைகள், பூங்குன்றனின் ஒரு அறையில் சோதனை நடைபெற்றது.

Advertisment
Advertisements

- ஜெயலலிதா அறையில் சோதனை நடத்தப்படவில்லை.

- போயஸ் கார்டனில் உறுதியான தகவல், ஆவணங்கள் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது.

- சோதனையில் 70-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

- 15 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

- சசிகலாவின் நான்கு அறைகள், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனின் ஒரு அறையில் சோதனை நடைபெற்றது.

- பறிமுதல் செய்த ஏராளமான பென்ட்ரைவ்கள், ஒரு லேப்டாப்பை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

- 5 அறைகளின் சாவிகளும் இளவரசியின் மகள் ஷகிலாவின் கணவர் ராஜராஜனிடமிருந்து பெறப்பட்டன.

- பெங்களூரு சிறையிலுள்ள சசிகலா, இளவரசியிடம் தேவைப்பட்டால் விசாரணை நடத்தப்படும்.

- வருமான வரித்துறை சோதனையில் 70-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

- தமிழக போலீசாரின் உதவியே போதுமானதாக இருந்ததால் துணை ராணுவத்தை நாடவில்லை.

It Raid Vk Sasikala Ttv Dhinakaran Jayalalithaa Vivek Jayaraman

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: