கடலூர் தி.மு.க மேயர் வீட்டில் திடீர் ரெய்டு: காரணம் என்ன?

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் கடலூர் திமுக மேயர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்தச் சோதனையின்போது,

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் கடலூர் திமுக மேயர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்தச் சோதனையின்போது,

author-image
WebDesk
New Update
Income Tax officials raided Cuddalore DMK Mayor Sundari Rajas house

கடலூர் திமுக மேயர் சுந்தரி ராஜா வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Cuddalore | Lok Sabha Polls | Dmk | மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் கடலூர் திமுக மேயர் சுந்தரி ராஜா வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று (ஏப்.18,2024) அதிரடி சோதனை நடத்தினார்கள்.

Advertisment

இந்தச் சோதனையானது மேயர் சுந்தரி ராஜாவின் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள வீட்டில் நடந்தது. வருமான வரித்துறை அதிகாரிகள் வீட்டில் உள்ள அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தினார்கள்.

கடலூர் மக்களவை தொகுதியில் தி.மு.க.வினர் பணப் பட்டவாடாவில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்தன. மேலும், தி.மு.க. மேயர் மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த நிலையில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். இதுமட்டுமின்றி கடலூர் திமுக மாவட்டச் செயலாளராக உள்ள மேயரின் கணவர் ராஜாவின் கார் உள்ளிட்ட வாகனங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

இந்தச் சோதனையில் இதுவரை எந்தப் பொருளும் கைப்பற்றப்பட்டதாக தெரியவில்லை. எனினும் சோதனைக்கு பின்னர் இது குறித்து தெரியவரும் எனக் கூறப்படுகிறது.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Dmk Cuddalore Lok Sabha Polls

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: