Advertisment

3-வது நாளாக தொடரும் சோதனை: செந்தில் பாலாஜியின் நண்பர் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட இடங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான நபர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் 3 நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

author-image
WebDesk
May 28, 2023 12:47 IST
செந்தில் பாலாஜியின் நண்பர் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

செந்தில் பாலாஜி

சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட இடங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான நபர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் 3 நாளாக  சோதனை நடத்தி வருகின்றனர்.

Advertisment

 பல்வேறு  இடங்களில் இந்த  சோதனையானது நடத்தப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக கோவை கோல்டு வின்ஸ் பகுதியில் உள்ள செந்தில் பாலாஜியின் ஆதரவாளரான  செந்தில் கார்த்திகேயன் இல்லத்தில் மூன்றாவது  நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. 

அதே போல   ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள செந்தில் பாலாஜியின் நண்பர் அரவிந்த் என்பவர் வசிக்கும் பிரிக்கால் அடுக்குமாடி குடியிருப்பில் வருமானவரித்துறை அதிகாரிகள் மூன்றாவது  நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் சௌரிபாளையம் பகுதியில் உள்ள அரவிந்த் அலுவலகத்திலும் சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது. இதே போன்று தொண்டாமுத்தூர் பகுதியில் அரவிந்தின் மனைவி காயத்ரி நடத்தி வரும் போதை மறுவாழ்வு மையத்திலும் சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது.  

பொள்ளாச்சி, கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளிலும் வருமான வரித்துறை  சோதனையானது   நடத்தப்பட்டு வருகிறது.  இந்த சோதனை   நாளையும் நீடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி: பி.ரஹ்மான், கோவை

#Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment