தஞ்சையில் கப்பல் சின்னத்தில் விவசாயிகள் சங்கம்: பி.ஆர் பாண்டியன் பிரசாரத்திற்கு ரெடி

விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு கப்பல் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு கப்பல் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
PR Pandian Farmers association leader request to TN Govt open paddy warehouses procurement Tamil News

பி.ஆர்.பாண்டியன்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இந்திய மக்களவை தேர்தலில் போட்டியிடும் விவசாயிகள் சங்கத்தின் வேட்பாளர் செந்தில் குமார் என்பவருக்கு கப்பல் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

Advertisment

இந்திய நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏபரல் 19-ந் தேதி தொடங்குகிறது. இந்த தேர்தலில், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் என். செந்தில்குமார் வேட்பாளராக போட்டியிடுகிறார். சுயேசையாக வேட்பாளர் என்கிற அடிப்படையில் தேர்தல் ஆணையம் கப்பல் சின்னம் ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதனையடுத்து வாக்காளர் பெருமக்கள் கப்பல் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுமென விவசாயிகள் சங்கத் தலைவர் பி ஆர் பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் நாளை 31.03.2024 காலை 8 மணிக்கு தஞ்சாவூர் பள்ளி அக்ரகாரம் சிறைகாத்த அய்யனார் கோவில் அருகில் இருந்து துவங்கி மாநகர வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரிக்கிற பணியில் செந்தில்குமார் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர் பாண்டியன் தெரிவித்துள்ளார். 

க.சண்முகவடிவேல்

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

PR Pandian

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: