இந்திய காவல்துறை விளையாட்டு போட்டி : கபடியில் வெண்கலம் வென்ற தமிழக பெண் காவலர்கள்

72 ஆவது அகில இந்திய காவல்துறை விளையாட்டு போட்டிகள் ஹரியானா மாநிலம் மதுபன் அகாடமியில் 04.10.2023 முதல் 08.10.2023 வரை நடைபெற்றது.

72 ஆவது அகில இந்திய காவல்துறை விளையாட்டு போட்டிகள் ஹரியானா மாநிலம் மதுபன் அகாடமியில் 04.10.2023 முதல் 08.10.2023 வரை நடைபெற்றது.

author-image
WebDesk
New Update
Kabaddi

கபடி போட்டியில் வெண்கலம் வென்ற பெண் காவலர்கள்

பாபு ராஜேந்திரன் கடலூர்

Advertisment

கடலூரில் கபடி விளையாட்டில் பயிற்சி பெற்ற இரண்டு பெண் காவலர்கள் தமிழக காவல்துறை சார்பில் கபடி போட்டியில் வெண்கல பதக்கம் வென்றுள்ளனர். இவர்களை கடலூர் எஸ் பி பாராட்டி வாழ்த்தி  பாராட்டினார்

72 ஆவது அகில இந்திய காவல்துறை விளையாட்டு போட்டிகள் ஹரியானா மாநிலம் மதுபன் அகாடமியில் 04.10.2023 முதல் 08.10.2023 வரை நடைபெற்றது. இப்போட்டியில் கடலூர் மாவட்டத்தில் கபடி விளையாட்டில் பயிற்சி பெற்ற தற்போது தமிழக காவல்துறையில் பயிற்சி பெற்ற மைதிலி மகேஷ்வரி ஆகிய இருவரும் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளனர்.

இதில் மைதிலி சென்னை மாநகர ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் நிலையில், மகேஷ்வரி, திருவாரூர் ஆயுதப்படையில் பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் தமிழக காவல்துறை சார்பில் கபடி போட்டியில் பங்கேற்று வெண்கலம் பதக்கம் பெற்றுள்ளனர். பதக்கம் வென்ற பெண் காவலர்களை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  இரா.இராஜாராம் பாராட்டினார்.

Advertisment
Advertisements

இந்த நிகழ்வின்போது ஆயுதப்படை காவல் ஆய்வாளர் அருட்செல்வன் தலைமை காவலர் ஞானமுருகன் உடன் இருந்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: