Advertisment

நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்தில் சிலை: வி.பி சிங் பேத்தி பேட்டி

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் எங்கள் தாத்தா வி.பி சிங்-க்கு சிலை வைக்கப்பட்டுள்ளது மிகவும் பெருமையாக உள்ளது- வி.பி சிங் பேத்தி ரிச்சா மஞ்சரி சிங்

author-image
WebDesk
New Update
VPsingh.jpg

சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் ரூ.52.20 லட்சம் மதிப்பில் நிறுவப்பட்ட முன்னாள் இந்தியப் பிரதமர் வி.பி.சிங் முழுஉருவ சிலையை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்று (நவ.27)  திறந்து வைத்தார்.  

 விழாவில் உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், வி.பி.சிங் மனைவி சீதா குமாரி, மகன் அஜயா சிங், பேத்தியினர் உள்ளிட்ட குடும்பத்தினர் கலந்து கொண்டனர். 

Advertisment

வி.பி.சிங் உத்தரப் பிரதேச முதல்வராகவும், மத்திய நிதி, வர்த்தகம், பாதுகாப்பு, வெளியுறவுத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர். தேசிய முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கி கடந்த 1989-ம் ஆண்டு நாட்டின் பிரதமரானார். 11 மாத அவரது ஆட்சியில் பல்வேறு சாதனைகள் புரிந்தார். 

சமூக நீதி காவலர் என்று அழைக்கப்படும் வி.பி.சிங் அவரது ஆட்சி காலத்தில் பல்வேறு சாதனைகளை புரிந்து நாட்டுக்கு முன்னோடியாக இருந்தார். சமூக ரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மண்டல் ஆணைய பரிந்துரைப்படி, மத்திய அரசுப் பணியிடங்களில் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் உத்தரவை அமல்படுத்தினார்.

காவிரி நீருக்காக நடுவர்மன்ற ஆணையத்தை அமைத்து தந்தார். சென்னை உள்நாட்டு விமான நிலையத்துக்கு காமராசர் பெயரையும், பன்னாட்டு விமானநிலையத்துக்கு அண்ணா பெயரையும் சூட்டினார். 

இந்நிலையில் விழாவில் கலந்து கொண்ட வி.பி சிங் பேத்தி ரிச்சா மஞ்சரி சிங்  நியூஸ்18 செய்திக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், "இன்றைய நாளுக்கு நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். எங்கள் தாத்தா சிலை திறப்பு விழாவிற்கு முதல்வர் ஸ்டாலின் எங்கள் குடும்பத்தை அழைத்தார். அதற்கு மிகவும் நன்றி. இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் எங்கள் தாத்தாவிற்கு சிலை வைக்கப்பட்டுள்ளது மிகவும் பெருமையாக உள்ளது. இந்தியாவில் இது எங்கும் செய்யப்பட வில்லை. 

20 வருடத்திற்கு முன் எங்கள் தாத்தா மண்டல் ஆணைய பரிந்துரையை அமல்படுத்தியபோது, பலருக்கும் அவர் வில்லனாக தெரிந்தார். அப்போது அது எதிர்க்கப்பட்டது. இட ஒதுக்கீடு சரியான முறையில் மக்களை சென்றடைய வேண்டும். அதுவே சரியான நோக்கமாக இருக்கும். அவர் அப்போது மேற்கொண்ட இந்த சிறப்பான முயற்சிதான் தற்போது சமூகத்தில் சரியான அளவு இடஒதுக்கீட்டுக்கு வழிவகுத்துள்ளது. இட ஒதுக்கீடு நாட்டு மக்களுக்குத் தேவை" என்று கூறினார்.

நீங்கள் அரசியலில் ஈடுபடுவீர்களா எனக் கேட்டதற்கு, தற்போது எதுவும் தெரியாது. காத்திருந்து பாருங்கள் என்று கூறினார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

VP singh Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment