சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி, வரும் 7ம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்க உள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, ஒரிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வினீர் சரண் மற்றும் உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப் ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய மத்திய அரசுக்கு கொலிஜியம் பரிந்துரை செய்தது.
கொலிஜியத்தின் இந்த பரிந்துரையை மத்திய சட்ட அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலகம் ஏற்றுக்கொண்டது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, வரும் 7ம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்க உள்ளார்.
இந்திரா பானர்ஜி நியமனத்தால் உச்சநீதிமன்றத்தில் உள்ள பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
ஏற்கனவே பானுமதி மற்றும் இந்து மல்கோத்ரா ஆகிய பெண் நீதிபதிகள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளாக பதவி வகித்து வருகின்றனர்.
இந்திரா பானர்ஜி பதவி உயர்வை அடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக தஹில் ரமணி நியமனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.