/indian-express-tamil/media/media_files/sQZdKoKC8s0RK39iS6qq.jpg)
Governor RN Ravi
மகளிர் மேம்பாடு, முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டு தேசத்தின் கொள்கையை பிரதமர் மோடி மாற்றியுள்ளார் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் உள்ள ஒளவையார் சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம்பேசுகையில், மகளிர் மேம்பாடு, முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டு தேசத்தின் கொள்கையை பிரதமர் மோடி மாற்றியுள்ளார்.
பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், ஆராய்ச்சிகளிலும் பெண்கள் அதிக அளவில் உள்ளனர்.
பிரதமர் மோடி தலைமையில் வங்கிகளில் 50 கோடி `ஜன் தன்' கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன, என்றார்.
மேலும், ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று செய்தியாளர்களை கூறப்பட்ட நிலையில், வேறொரு நாளில் சந்திப்பதாக கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.