விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட வழக்கு: பல்வீர் சிங் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அனுமதி

அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்டது தொடர்பான வழக்கில் ஐ.பி.எஸ் அதிகாரி பல்வீர் சிங் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுத் தரப்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்டது தொடர்பான வழக்கில் ஐ.பி.எஸ் அதிகாரி பல்வீர் சிங் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுத் தரப்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Balveer Singh Madurai HC Bench

ஐ.பி.எஸ் அதிகாரி பல்வீர் சிங் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக அரசு அனுமதி

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில் ஐ.பி.எஸ் அதிகாரி பல்வீர் சிங் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுத் தரப்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Advertisment

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருந்தவர் ஐ.பி.எஸ் அதிகாரி பல்வீர் சிங். இவர் ஏப்ரல் 2023-ல், அம்பாசமுத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சின்ன சின்ன வழக்குகளில் சிக்குபவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து, கட்டிங் பிளேயரால் பற்களைப் பிடுங்கி சித்ரவதை செய்ததாக புகார் எழுந்தது. பாப்பாக்குடி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம் காவல் நிலையப் பகுதிகளில் விசாரணை கைதிகளின் பற்களைப் பிடுங்கி சித்ரவதை செய்ததாக ஐ.பி.எஸ் அதிகாரி பல்வீர் சிங் மீது குற்றம்சாட்டப்பட்டது.

விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்டது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி  பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஐ.பி.எஸ் அதிகாரி பல்வீர் சிங் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

ஐ.பி.எஸ் அதிகாரி பல்வீர் சிங்-ஆல் பற்கள் பிடுங்கப்பட்டு பாதிக்கப்பட்ட அருண்குமார் உயர்நீதிமன்ற  மதுரை கிளையில் ஒரு வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், ஐ.பி.எஸ் அதிகாரி பல்வீர் சிங் தன்னை விசாரணைக்காக அழைத்துச் சென்று தன்னுடைய பற்களைப் பிடுங்கி சித்ரவதை செய்ததாகவும், இவர் மீது குற்ற நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். மேலும், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணை செய்து வருகிறது. இந்த வழக்கில் விரைந்து விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகையை விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். 

Advertisment
Advertisements

இந்த மனு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர்,  “குற்றச் செயலில் ஈடுபட்ட ஐ.பி.எஸ் அதிகாரி பல்வீர் சிங் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் அவர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கவும் தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது” என்ற தகவலை தெரிவித்தார். 

மேலும், ஐ.பி.எஸ் அதிகாரி பல்வீர் சிங் மீதான குற்றப்பத்திரிகை, விசாரணை அதிகாரி அமுதா ஐ.ஏ.எஸ் விசாரணை அறிக்கைகளை சம்பந்தப்பட்ட மனுதாரர்களுக்கு வழங்குவதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தரப்பில் கேட்கப்பட்டது.  இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை டிசம்பர் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Madurai High Court

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: