/indian-express-tamil/media/media_files/2025/05/16/Xtvm6DZN4h7BzREcemc1.jpg)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.90-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
Jun 24, 2025 22:42 IST
எங்கள் இயக்கம் சீட்டு பேரம் பேசுவதற்கு அல்ல - திருமாவளவன்
விருது வழங்கும் விழாவில் பேசிய வி.சி.க தலைவர் திருமாவளவன்: இந்து மதம் என்ற ஒன்றே கிடையாது; ஆங்கிலேயர் ஆட்சிக்கு பிறகு இந்து மதம் வந்தது. பிற மதங்களில் சகோதரத்துவம் உள்ளது; இந்து மதம் அடிப்படையிலேயே பாகுபாடு கொண்டது; அணு ஆயுதங்களால்கூட தகர்க்க முடியாதது இந்தியாவில் உள்ள சாதிய கட்டமைப்பு; எங்கள் இயக்கம் சட்டமன்ற, நாடாளுமன்ற சீட்டு பேரம் பேசுவதற்கு அல்ல; ஒருநாள் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றுகூட நான் அறிவித்துவிடுவேன். இருக்கையில் எனக்கு நம்பிக்கை இல்லை. பிளாஸ்டிக் சேர், தரையில்கூட அமருவேன். புண்ணியம் கிடைக்குமென திருநீறு பூசவில்லை.., அவமதிக்கும் நோக்கில் அதை அழிக்கவும் இல்லை” என்று பேசினார்.
-
Jun 24, 2025 21:34 IST
சாதி ஒழிப்பும் தமிழ் தேசியம்தான் - நடிகர் சத்யராஜ்
கடவுள் ஒழிப்பு முக்கியம் இல்லை; சாதி ஒழிப்பும் தமிழ் தேசியம்தான்" என்று நடிகர் சத்யராஜ் அதிரடியாகப் பேசியுள்ளார். சென்னையில் நடைபெற்ற வி.சி.க விருது வழங்கும் விழாவில் அவர் இவ்வாறு பேசினார்.
நடிகர் சத்யராஜ் தனது பேச்சில், "தமிழன்தான்தான் தமிழனை வெட்டுகிறான். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் திருமாவளவன் குறித்த புத்தகம் வெளியிட்டுள்ளனர்" என்றும் குறிப்பிட்டார்.
-
Jun 24, 2025 20:44 IST
நடிகர் ஸ்ரீகாந்த் கைது: போதைப்பொருள் வழக்கில் ஆதாரங்களுடன் நடவடிக்கை - காவல்துறை அறிக்கை
போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் உரிய மருத்துவ பரிசோதனைக்குப் பிறகே கைது செய்யப்பட்டதாக காவல்துறை இன்று அறிவித்துள்ளது. ஸ்ரீகாந்தின் வீடு முழுமையாகச் சோதனை செய்யப்பட்டு, ஆதாரங்களுடன் அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் பிரசாந்த் என்பவருக்கு பெங்களூரு பிரதிப் என்பவரும், அவரது கானா நாட்டு நண்பர் ஜான் மூலமும் கொக்கேன் சப்ளை செய்யப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. போதைப்பொருள் வழக்கில் தலைமறைவாக உள்ளவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் காவல்துறை உறுதியளித்துள்ளது.
-
Jun 24, 2025 19:52 IST
மருத்துவமனையை ஆய்வு செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அழைப்பு
வேலூரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஒரு விளம்பரக் கட்டடமா அல்லது உண்மையான மருத்துவமனையா என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பிருந்த நிலையில், அதை நேரடியாக வந்து ஆய்வு செய்யுமாறு அவருக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அழைப்பு விடுத்துள்ளார்.
“வேலூர் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை பழனிசாமி ஆய்வு செய்யலாம்" என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார்.
-
Jun 24, 2025 19:36 IST
பட்டியலின மக்கள் மீதான வன்முறைகள் அதிகரிப்பு: விளம்பர மாடல் தி.மு.க. அரசு - ஆதவ் அர்ஜுனா விமர்சனம்
த.வெ.க தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, கடந்த நான்காண்டுகால தி.மு.க ஆட்சியில் பட்டியலின மக்கள் மீதான வன்முறைகள், சமூக பாகுபாடுகள், அச்சுறுத்தல்கள் அன்றாட நிகழ்வுகளாகி விட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து ஆதவ் அர்ஜுனா மேலும் தெரிவிக்கையில், "பட்டியலின மக்களின் வாழ்க்கையிலும், அந்த மாணவர்களின் கல்வியிலும் வன்மத்தோடு பாகுபாடு காட்டப்படுகிறது. சமூகநீதி அரசு என 'முச்சக்கர முச்சக்கர' விளம்பரப்படுத்திக் கொள்ளும் விளம்பர மாடல் தி.மு.க அரசு, உண்மையில், 'சமூக அநீதி' அரசாகவே செயல்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.
-
Jun 24, 2025 19:25 IST
அ.தி.மு.க, பா.ஜ.க-வுடன் இணைந்து செயல்படுவது தமிழ்நாட்டிற்கு செய்யும் துரோகம் - கனிமொழி
சென்னை விமான நிலையத்தில் தி.மு.க எம்.பி கனிமொழி பேட்டி: “அதிமுக, பாஜகவுடன் இணைந்து செயல்படுவது தமிழ்நாட்டிற்கு செய்யும் துரோகம். பெரியாரையும் அண்ணாவையும் விமர்சனம் செய்யும் இடத்தில் கலந்துகொண்டதன் மூலம், அவர்களுக்கும் திராவிட இயக்கத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பதைக் காட்டுகிறது” என்று கூறினார்.
-
Jun 24, 2025 19:22 IST
டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை. வளாக விடுதியில் அடிப்படை வசதி மேம்படுத்தக் கோரி மாணவிகள் ஆர்ப்பாட்டம்
சென்னை பெருங்குடியில் செயல்படும் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை. வளாக விடுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே, கூடுதல் மாணவிகள் தங்கியிருக்கும் நிலையில், சேப்பாக்கம் அரசு மாணவியர் விடுதியில் இருந்து 150 பேரை இங்கு இடமாற்றம் செய்திருப்பதால் மேலும் நெருக்கடியான சூழல் நிலவுவதாக தெரிவித்தனர்.
-
Jun 24, 2025 18:22 IST
8 அரசு அதிகாரிகள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு
5 ஐ.ஏ.எஸ். உள்பட 8 அரசு அதிகாரிகள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஜூலை 10-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் கூத்தப்பாக்கத்தில் கோயில் நிலத்தில் உள்ள தனியார் பள்ளியை அகற்றக் கோரி வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றம் உத்தரவிட்டும் தனியார் பள்ளியை அகற்றவில்லை என நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
-
Jun 24, 2025 17:45 IST
இரவு 7 மணிக்குள் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, ஈரோடு, விருதுநகர், குமரி மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.
-
Jun 24, 2025 17:23 IST
”கமிஷன் மட்டுமே குறியாகக்கொண்டு திமுக அரசு செயல்படுகிறது”
எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் வேலூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறக்க இருப்பது, மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையா? மல்டி ஸ்பெஷாலிட்டி விளம்பரக் கட்டடமா? நோயாளிகளின் உயிருடன் விளையாடத் துடிக்கும் முதலமைச்சருக்கு கண்டனம் தெரிவிப்பததாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் கிடைப்பதில்லை என்றும் இ.பி.எஸ். குற்றஞ்சாட்டியுள்ளார்
-
Jun 24, 2025 17:21 IST
மாம்பழம் கொள்முதல் - பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்
மாம்பழங்களை உரிய விலையில் கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும் என பிரதமர் மோடி, மத்திய மந்திரி சிவராஜ் சிங் சவுகான் ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், மாம்பழ விவசாயிகளின் துயரைப் போக்கிட, உற்பத்தியாகியுள்ள மாம்பழங்களை உரிய விலையில் மத்தியக் கொள்முதல் முகமைகள் கொள்முதல் செய்திட உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
-
Jun 24, 2025 17:01 IST
நாடு முழுவதும் ரயில் டிக்கெட் கட்டணம் சிறிதளவு உயர்கிறது
இந்திய ரயில்வே துறை ஜூலை 1-ம் தேதி முதல் ரயில் டிக்கெட் கட்டணத்தை சிறிதளவு மாற்றி அமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம் குறுகிய தூரம் மற்றும் புறநகர் வழித்தடங்களில் ரயில் டிக்கெட் உயரப் போவதில்லை. அதாவது, 2-ம் வகுப்பில் பயணம் செய்பவராக இருந்தால், 500 கி.மீ வரையிலான தொலைவுக்கு டிக்கெட் கட்டண உயர்வு இருக்காது. 500 கிமீ மேலான பயணத்தில் ஒரு கி.மீ.க்கு பைசா என்ற விகிதத்தில் கணக்கிட்டு கட்டணம் உயர்த்தப்படும் உதாரணமாக 1,000 கி.மீ தூரப் பயணத்திற்கான டிக்கெட் கட்டணம் முன்பு இருந்ததை ரூ.10 அதிகரிக்கும். மேலும், இந்தக் கட்டண உயர்வு வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் சொல்லப்படுகிறது.
-
Jun 24, 2025 16:59 IST
இங்கிலாந்து மண்ணில் கே.எல்.ராகுல் சாதனை
இங்கிலாந்து மண்ணில் அதிக டெஸ்ட் சதங்கள் (3) விளாசிய இந்திய ஓப்பனர் என்ற சாதனையை படைத்துள்ளார் கே.எல்.ராகுல். ராகுல் டிராவிட், சுனில் கவாஸ்கர், விஜய் மெர்சண்ட், ரவி சாஸ்திரி ஆகியோர் தலா 2 சதங்கள் அடித்துள்ளனர்
-
Jun 24, 2025 16:37 IST
வந்தே பாரத் ரயிலில் வடிந்த தண்ணீர்
Video: Sun News
#Watch | டெல்லி சென்றுகொண்டிருந்த வந்தே பாரத் ரயிலில் திடீரென AC-ல் இருந்து தண்ணீர் வடிந்ததால் பயணிகள் அசௌகரியம். இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.#SunNews | #VandeBharatExpress | #WaterLeakage pic.twitter.com/fL4iK9hHcC
— Sun News (@sunnewstamil) June 24, 2025 -
Jun 24, 2025 16:10 IST
மத்திய அரசின் பணிக்குச் செல்கிறார் பாலகிருஷ்ணன்
தமிழ்நாடு காவல்துறையில் நிர்வாகப் பிரிவு ஐ.ஜி. ஆக பொறுப்பு வகிக்கும் பாலகிருஷ்ணன், அயல் பணியாக மத்திய அரசின் பணிக்குச் செல்கிறார்
எல்லைப் பாதுகாப்புப் படையில் ஐ.ஜி. ஆக நியமனம். அவரை தற்போதைய பொறுப்பில் இருந்து விடுவிக்க உள்துறை அமைச்சகம், தமிழ்நாடு அரசுக்கு கடிதம்
-
Jun 24, 2025 15:50 IST
ஓடும் ரயிலில் சாகசத்தில் ஈடுபடும் சிறுவர்கள்
Video: Sun News
#WATCH | ஆபத்தை உணராமல் ஓடும் ரயிலில் சாகசத்தில் ஈடுபடும் சிறுவர்கள் மீது ரயில்வே போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை#SunNews | #Avadi | #Chennai pic.twitter.com/IcwbyU9RMP
— Sun News (@sunnewstamil) June 24, 2025 -
Jun 24, 2025 14:27 IST
பேனர்கள் வைப்பதை விஜய் விரும்பவில்லை: த.வெ.க பொதுச்செயலாளர் உத்தரவு
த.வெ.க சார்பில் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், நெடுஞ்சாலையோரங்களிலும் பேனர் வைக்கக் கூடாது. பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் த.வெ.க சார்பில் பேனர்கள் வைப்பதை விஜய் விரும்பவில்லை த.வெ.க தலைவர் விஜயின் உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும், நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் பின்பற்றவும் என த.வெ.க பொதுச்செயலாளர் ஆனந்த் தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
-
Jun 24, 2025 14:05 IST
தமிழகத்தில் நிதி நெருக்கடி நிலவுகிறதா? ஐகோர்ட் கேள்வி
பொது வினியோக திட்டத்துக்கு சமையல் எண்ணெய் சப்ளை செய்ததற்கு வழங்க வேண்டிய ரூ.141 கோடியை வழங்கக் கோரி தனியார் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மாநிலத்தில் என்ன நடக்கிறது? மாநில அரசு முன்னுதாரணமாக திகழவேண்டும், தமிழகத்தில் நிதி நெருக்கடி நிலை நிலவுகிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், அரசின் கருத்தை தெரிவிக்குமாறு கூறிய நீதிபதிகள் வழக்கு விசாரணை
ஜூன் 27ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர். -
Jun 24, 2025 13:18 IST
தமிழ்நாட்டில் ஜூன் 27, 28 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் ஜூன் 27, 28 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 7 -நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது.
-
Jun 24, 2025 13:17 IST
மராட்டிய சட்டமன்ற தேர்தலின்போது வாக்காளர் முறைகேடு: ராகுல் காந்தி பரபரப்பு புகார்
மராட்டிய சட்டமன்ற தேர்தலின்போது முதல்வர் பட்னவிஸ் போட்டியிட்ட தொகுதியில் முறைகேடு என்று மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார். ஐந்தே மாதங்களில் பட்னவிஸ் போட்டியிட்ட நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் வாக்காளர் எண்ணிக்கை 8% அதிகரித்தது எப்படி? என ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மராட்டிய முதல்வரின் தொகுதியில் தினசரி 162 வாக்காளர்கள் அதிகரித்ததாக வெளியான செய்தியை சுட்டிக் காட்டி விமர்சனம் செய்துள்ளார்.
-
Jun 24, 2025 13:02 IST
ஏர் இந்தியா விமானங்களில் தணிக்கை முடியும் வரை அதன் சேவையை நிறுத்தி வைக்கக் கோரி மனு
ஏர் இந்தியா விமானங்களில் தணிக்கை முடியும் வரை அதன் சேவையை நிறுத்தி வைக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கறிஞர் அஜய் பன்சால் தாக்கல் செய்த மனு விரைவில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியதை அடுத்து பாதுகாப்பு தணிக்கை நடைபெற உள்ளது.
-
Jun 24, 2025 13:01 IST
தமிழ்நாட்டில் தென்மெற்குப் பருவமழை 15% கூடுதலாக பெய்துள்ளது!!
தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை இன்று வரை இயல்பை விட 15% கூடுதலாக பெய்துள்ளது. இயல்பான நிலையில் 42.3 மி.மீ. மழை பொழியும் நிலையில் இன்று வரை 48.6 மி.மீ மழை பொழிந்துள்ளது. சென்னையில் தென்மேற்கு பருவமழை இன்று வரை இயல்பை விட 37% கூடுதலாக பெய்துள்ளது. சென்னையில் இயல்பான நிலையில் 51.7 மி.மீ. மழை பொழியும் நிலையில் இன்று வரை 70.7 மி.மீ மழை பொழிந்துள்ளது.
-
Jun 24, 2025 12:50 IST
50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் சிகிச்சை – தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
தமிழ்நாட்டில் கிராம பகுதிகளில் உள்ள 50 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் சிகிச்சை மையங்கள் நிறுவ அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டிருந்த நிலையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. தேவைப்படும் நோயாளிகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் தனியார், தன்னார்வலர்கள் பங்களிப்புடன் ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Jun 24, 2025 12:19 IST
ஈரான் உடனான போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல்..!!
ஈரான் உடனான போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல்; போர் நிறுத்தம் மேற்கொள்வதாக ஈரான் அறிவித்த நிலையில் இஸ்ரேலும் அறிவித்துள்ளது. ஈரான் – இஸ்ரேல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். ஈரான் – இஸ்ரேல் போர் நிறுத்தம் அறிவித்ததால் 12 நாட்கள் நடைபெற்ற மோதல் முடிவுக்கு வந்தது.
-
Jun 24, 2025 12:13 IST
மூப்பிலாத் தேன் தமிழில் இறவாக் கவிதைகளை படைத்த கவியரசர் கண்ணதாசனை போற்றி வணங்குகிறேன் -முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “மூப்பிலாத் தேன்தமிழில் இறவாக் கவிதைகள் படைத்திட்ட கவியரசர் கண்ணதாசன் அவர்களது பிறந்தநாளில் அவரைப் போற்றி வணங்குகிறேன்! காலத்தால் வெல்ல முடியாத மாமேதைகள் தங்கள் கலைப் படைப்புகளால் உலகம் உள்ளவரை நம் உள்ளத்தில் நிலைத்து நிற்பார்கள்!”இவ்வாறு தெரிவித்துள்ளார்.
-
Jun 24, 2025 12:11 IST
போலி பாசம் தமிழுக்கு; பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
போலி பாசம் தமிழுக்கு; பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தென்னிந்திய மொழிகளுக்காக முதலை கண்ணீர் மட்டுமே வடிக்கிறது ஒன்றிய அரசு. சமஸ்கிருதத்துக்கு கோடிகளை ஒதுக்கிவிட்டு தென்னிந்திய மொழிகளுக்கு எதுவும் ஒதுக்கவில்லை,”எனத் தெரிவித்தார்.
-
Jun 24, 2025 11:49 IST
மாற்றுப்பாலினத்தவர்களுக்கான நிபந்தனைகள் தளர்வு
புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் ஆகிய திட்டங்களில் திருநங்கை, திருநம்பி மற்றும் மாற்றுப்பாலினத்தவர்கள் பயன்பெறும் வகையில் நிபந்தனைகளை தளர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை நீக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
-
Jun 24, 2025 11:44 IST
'போர் நிறுத்த நடவடிக்கையை மீற வேண்டாம்'; ஈரான் - இஸ்ரேலுக்கு டிரம்ப் வலியுறுத்தல்
ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையேயான போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், இந்த போர் நிறுத்த நடவடிக்கையை மீற வேண்டாம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
-
Jun 24, 2025 11:09 IST
பெரியார், அண்ணா குறித்த அவதூறு வீடியோவிற்கு கண்டனம் - ஆர்.பி. உதயகுமார்
முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்த அவதூறான வீடியோ ஒளிபரப்பப்பட்டதற்கு அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், அரசியல் இருக்காது என்ற நம்பிக்கையோடு தான் மாநாட்டில் பங்கேற்றதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். குறிப்பாக, மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கும், அ.தி.மு.க-விற்கும் தொடர்பு கிடையாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
Jun 24, 2025 11:05 IST
அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
அ.தி.மு.க மாவட்ட செயலாளர்களுடன் அக்கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட அமைப்பு ரீதியான 21 மாவட்ட நிர்வாகிகளுடன் இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது. இதில், பூத் கமிட்டி அமைப்பதற்கான இறுதிகட்ட பணிகள் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.
-
Jun 24, 2025 10:51 IST
சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கான நிதி விவரம்
சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக 2014-2025 வரை ரூ. 2532.59 கோடியை மத்திய அரசு ஒதுக்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஆர்.டி.ஐ தகவல் மூலம் கிடைக்கப்பெற்ற தரவுகளின் அடிப்படையில், மற்ற மொழிகளுக்கு ஒதுக்கிய நிதியை விட இது 17 மடங்கு அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகையில் 2014-2025 காலகட்டத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா உள்ளிட்ட 5 மொழிகளின் வளர்ச்சிக்கு ரூ. 147.56 கோடி மட்டுமே ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.
-
Jun 24, 2025 10:23 IST
போர் நிறுத்தம் தொடங்கியதாக அறிவித்த ஈரான் அரசு ஊடகம் - மௌனம் காக்கும் இஸ்ரேல்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இஸ்ரேல் - ஈரான் மோதலில் "முழுமையான போர் நிறுத்தம்" ஏற்பட்டதாக அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, இஸ்ரேல் மீது புதிய ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு மூன்று பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல்களை தொடர்ந்து, போர் நிறுத்தம் தொடங்கியுள்ளதாக ஈரான் அரசு ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், போர் நிறுத்தத்திற்கு தங்கள் ஒப்புதலை இஸ்ரேல் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
-
Jun 24, 2025 09:45 IST
இஸ்ரேல்-ஈரான் போர் நிறுத்தத்தின் பின்னணியில் நேட்டோ உச்சிமாநாட்டிற்கு டிரம்ப் செல்கிறார்
வெள்ளை மாளிகைக்குத் திரும்பிய பின்னர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேட்டோவில் முதன்முறையாக தோன்றியது, பாதுகாப்பு கூட்டணியில் உள்ள மற்றவர்களிடமிருந்து அமெரிக்கா எவ்வாறு ஒரு வரலாற்று இராணுவ செலவின உறுதிமொழியைப் பெற்றது என்பதை மையமாகக் கொண்டிருந்தது – நடைமுறையளவில் அதை அதன் விருப்பத்திற்கு வளைத்தது.
ஆனால் அதற்கு பதிலாக, தெஹ்ரானின் அணுசக்தி அபிலாஷைகளை அரித்துவிட்டதாக நிர்வாகம் கூறும் ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி செறிவூட்டல் நிலையங்களைத் தாக்குவதற்கான ட்ரம்பின் முடிவும், அத்துடன் இஸ்ரேலும் ஈரானும் "முழுமையான மற்றும் முழுமையான போர்நிறுத்தத்தை" எட்டியிருப்பதாக ஜனாதிபதியின் திடீர் அறிவிப்பும் இப்போது கவனத்தை ஈர்த்துள்ளது. உச்சிமாநாட்டிற்கு அவர் புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் மோதல்களில் ஏற்பட்ட கூர்மையான யு-டர்ன் நெதர்லாந்தின் ஹேக்கில் விவாதங்களில் ஆதிக்கம் செலுத்துவது உறுதி.
தாக்குதல்களின் தாக்கம் ஏற்கனவே உச்சிமாநாட்டை வடிவமைக்கத் தொடங்கியிருந்தது, நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ருட்டே ஞாயிறன்று ஹேக்கில் நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பு செலவினங்களில் ஒருங்குவிந்திருக்க வேண்டிய ஒரு ஆர்ப்பாட்டத்தில் மோதலைக் கண்டிக்க வந்திருந்த போதினும் கூட, இந்த பிரச்சினையைச் சுற்றி நடனமாடினார்.
-
Jun 24, 2025 09:45 IST
ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்கள் - உலகளாவிய பயண இடையூறுகள், விமானங்கள் ரத்து
ஈரானுடனான இஸ்ரேலின் போரில் அமெரிக்கா நுழைவது உலகளவில் பயண இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது. வார இறுதியில் மூன்று ஈரானிய அணுசக்தி மற்றும் இராணுவ தளங்கள் மீது ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்ட முன்னோடியில்லாத குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து, திங்களன்று கட்டாரின் அல் உடெய்ட் விமான தளத்தில் அமெரிக்க படைகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியது.
அமெரிக்காவும் இங்கிலாந்தும் தங்கள் குடிமக்களை அங்கு தஞ்சமடையுமாறு வலியுறுத்தியதை அடுத்து, சில மணி நேரங்களுக்கு முன்பு கத்தார் தனது வான்வெளியை மூடியது. அமெரிக்காவின் வார இறுதி தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த பிராந்தியம் விளிம்பில் உள்ளது – மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது ஒரு திடீர் குண்டுவீச்சுடன் போரைத் தொடங்கியதிலிருந்து, ஈரான் இந்த மாத தொடக்கத்தில் அதன் சொந்த ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுடன் பதிலளித்துள்ளது.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே கொடிய தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், அப்பிராந்தியம் முழுவதிலும் உள்ள வான்வெளி மற்றும் விமான நிலையங்களின் பிரிவுகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. விமான நிறுவனங்கள் சமீபத்திய நாட்களில் அதிகமான விமானங்களை ரத்து செய்தன, சில வாரத்தின் நடுப்பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாதைகளை நிறுத்தின - குறிப்பாக கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில், ஈரானில் இருந்து பாரசீக வளைகுடா முழுவதும்.
-
Jun 24, 2025 09:08 IST
இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் 3 பேர் படுகாயம்
ஈரானிய ஏவுகணைகள் நடத்திய சமீபத்திய தாக்குதலில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளதாக இஸ்ரேலின் அவசர சேவை மேகன் டேவிட் அடோம் (எம்.டி.ஏ) தெரிவித்துள்ளார்.
எம்.டி.ஏ ஒரு அறிக்கையில், "சமீபத்திய எச்சரிக்கைகளைத் தொடர்ந்து. நாட்டின் தெற்கில் உள்ள சம்பவத்தில். இதுவரை, எம்.டி.ஏ மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவர்கள் ஆபத்தான நிலையில் காயமடைந்த 3 பேருக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றனர், சுமார் 40 வயது ஆண், சுமார் 30 வயது பெண் மற்றும் சுமார் 20 வயது இளைஞர், 1 மிதமான மற்றும் 5 காயமடைந்த லேசான நிலையில் உள்ளனர்.
-
Jun 24, 2025 09:08 IST
ஈரானின் அரசு ஊடகம் போர் நிறுத்தத்தை அறிவித்தது
கத்தாரில் உள்ள அமெரிக்க தளத்தின் மீது தெஹ்ரான் திங்கள்கிழமை இரவு 10 மணியளவில் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் மீது போர் நிறுத்தம் விதிக்கப்பட்டுள்ளதாக ஈரானின் அரசு தொலைக்காட்சி சேனலான ஐ.ஆர்.ஐ.என்.என் அறிவித்துள்ளது.
-
Jun 24, 2025 08:40 IST
ஈரானுக்கு எதிராக டிரம்ப் இராணுவத்தைப் பயன்படுத்துவதை மறுபரிசீலனை செய்வதற்கான தீர்மானம்
வார இறுதியில் தெஹ்ரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பின்னர், ஈரானுக்கு எதிராக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இராணுவ சக்தியைப் பயன்படுத்துவதை சரிபார்க்க அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் மூன்று ஜனநாயகக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் திங்களன்று ஒரு போர் அதிகார தீர்மானத்தை அறிமுகப்படுத்தினர்.
பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை இரண்டிலும் டிரம்பின் குடியரசுக் கட்சி பெரும்பான்மையைக் கொண்டுள்ளது, மேலும் டிரம்பின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் எந்தவொரு தீர்மானமும் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட வாய்ப்பில்லை.
இதற்கு பதிலடியாக கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை ஈரான் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. ஜூன் 13 அன்று இஸ்ரேல் தனது பிராந்திய போட்டியாளரைத் தாக்கியபோது தொடங்கிய இஸ்ரேல்-ஈரான் போர், அக்டோபர் 2023 இல் காசாவில் இஸ்ரேலின் போர் தொடங்கியதிலிருந்து ஏற்கனவே விளிம்பில் உள்ள ஒரு பிராந்தியத்தில் பதட்டங்களை மேலும் அதிகரித்தது.
-
Jun 24, 2025 08:39 IST
ஈரானிய ஏவுகணைகளின் அச்சுறுத்தல் முடிந்ததால் தங்குமிடங்களை விட்டு வெளியேறுமாறு குடிமக்களுக்கு இஸ்ரேல் இராணுவம் அறிவுறுத்தல்
ஈரானிய ஏவுகணைகளின் புதிய அலையின் அச்சுறுத்தல் முடிவடைந்ததாகக் கூறப்படுவதால், அவர்கள் பாதுகாக்கப்பட்ட தங்குமிடங்களை விட்டு வெளியேறலாம் என்று இஸ்ரேலிய இராணுவம் தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
-
Jun 24, 2025 08:19 IST
போர் நிறுத்த கோரிக்கையை மீண்டும் வலியுறுத்திய டிரம்ப்
இஸ்ரேலும் ஈரானும் தன்னிடம் வந்து "சமாதானம்" என்று கூறியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போர் நிறுத்த கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
ட்ரூத் சோஷியல் பதிவில், "இஸ்ரேலும் ஈரானும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் என்னிடம் வந்து, "அமைதி!" என்று சொன்னார்கள். நேரம் வந்துவிட்டது என்று தெரிந்தது. உலகமும், மத்திய கிழக்கும்தான் உண்மையான வெற்றியாளர்கள்! இரு நாடுகளும் தங்களது எதிர்காலத்தில் மிகப்பெரிய அன்பு, அமைதி மற்றும் வளத்தைக் காணும். அவர்கள் பெறுவதற்கு நிறைய இருக்கிறது, இருப்பினும், அவர்கள் நீதி மற்றும் சத்தியத்தின் பாதையிலிருந்து விலகிச் சென்றால் இழப்பதற்கு நிறைய இருக்கிறது. இஸ்ரேல் & ஈரான் எதிர்காலம் வரம்பற்றது, & பெரிய வாக்குறுதி நிரப்பப்பட்ட. கடவுள் உங்கள் இருவரையும் ஆசீர்வதிப்பார்!"
-
Jun 24, 2025 08:16 IST
கவிழ்ந்த வாழைத்தார்கள் ஏற்றி வந்த லாரி
ஆந்திராவில் இருந்து வாழைத்தார்கள் ஏற்றி வந்த லாரி விபத்தில் சிக்கியது சாலையோரம் நின்றுகொண்டிருந்த கார் மீது மோதியது, இதில் சாலையில் நடந்து சென்ற ஓட்டல் மேலாளர் சாமுவேலுக்கு கால் துண்டானது
-
Jun 24, 2025 08:15 IST
சாலையோரம் நின்றிருந்த பெண்கள் மீது மோதிய கார்
மக்கள் நடமாடும் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக சென்று விபத்து ஏற்பட்டது. தறிகெட்டு ஓடி சாலையோரம் நின்றிருந்த 3 பெண்கள் மீது பயங்கரமாக மோதியது, கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட பெண்கள் படுகாயம் அடைந்தனர்.
-
Jun 24, 2025 08:14 IST
மூர் மார்க்கெட் - கும்மிடிப்பூண்டி மின்சார ரயில்கள் ரத்து
சென்னை, மூர் மார்க்கெட் - கும்மிடிப்பூண்டி இடையே காலை 9.15 முதல் மாலை 3.15 மணி வரை 39 மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. கும்மிடிப்பூண்டி - பொன்னேரி இடையே நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக 39 புறநகர் மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. மூர் மார்க்கெட் - பொன்னேரி வரை மட்டும், இரு மார்கத்திலும் 21 சிறப்பு புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
Jun 24, 2025 08:13 IST
இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா நாளை விண்வெளி பயணம்
ஆக்சியம்-4 திட்டம் மூலம் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 வீரர்கள், நாளை விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டனர். பல்வேறு காரணங்களால், மொத்தம் 6 முறை ஆக்சியம்-4 திட்டம் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்திய நேரப்படி நாளை மதியம் 12.01 மணிக்கு பால்கான் ராக்கெட் மூலம், இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்டோர் விண்வெளிக்கு செல்கின்றனர்.
-
Jun 24, 2025 08:12 IST
சென்னை - வளைகுடா நாடுகளுக்கு 11 விமானங்கள் ரத்து
ஈரான், இஸ்ரேல் போர் காரணமாக, மத்திய கிழக்கு பகுதிகளில் வான்வழி மூடப்பட்டுள்ளதால், சென்னை விமான நிலையத்தில், 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தோகா, அபுதாபி, குவைத், துபாய் ஆகிய 6 புறப்பாடு விமானங்கள், 5 வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தாய்லாந்தில் இருந்து தோகா சென்று கொண்டிருந்த, 3 கத்தார் ஏர்லைன்ஸ் விமானங்கள், தோகா செல்ல முடியாமல், சென்னையில் வந்து தரையிறங்கின.
-
Jun 24, 2025 08:09 IST
பசியில் தவிக்கும் காசா!
காசாவின் பெய்ட் லஹியா பகுதியில் உணவு மற்றும் நிவாரண உதவிகளை பெற முண்டியடித்து மக்கள் சென்றனர். உணவை பெறுவதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
Jun 24, 2025 08:07 IST
அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இபிஎஸ் இன்று ஆலோசனை
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் இன்றும் நாளையும் மாவட்டச் செயலாளர்களுடன் இபிஎஸ் ஆலோசனை நடத்துகிறார். திண்டுக்கல், பெரம்பலூர், கரூர், தேனி, மதுரை உள்ளிட்ட 22 மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை.
-
Jun 24, 2025 08:05 IST
போர் நிறுத்த பரிசீலனைக்கு மத்தியில் ஈரானில் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது
தெஹ்ரான் மற்றும் டெல் அவிவ் இடையே போர் நிறுத்தம் குறித்து பரிசீலிக்கப்பட்டுள்ள நிலையில், சிறிது நேரத்திற்கு முன்பு ஈரானில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (ஐ.டி.எஃப்) தெரிவித்துள்ளது.
-
Jun 24, 2025 08:04 IST
ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளை அடையாளம் கண்டதாக இராணுவம் கூறியதால் இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்தன
போர் நிறுத்த ஒப்பந்த பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளை சைரன்களாக அடையாளம் கண்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (ஐ.டி.எஃப்) உறுதிப்படுத்தியுள்ளது.
"சிறிது நேரத்திற்கு முன்பு, ஈரானில் இருந்து இஸ்ரேல் நாட்டை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து இஸ்ரேல் முழுவதும் பல பகுதிகளில் சைரன்கள் ஒலித்தன" என்று ஐ.டி.எஃப் தெரிவித்துள்ளது.
"இந்த நேரத்தில், இஸ்ரேலிய விமானப்படை அச்சுறுத்தலை அகற்ற தேவையான இடங்களில் இடைமறித்து தாக்க செயல்படுகிறது" என்று ஐ.டி.எஃப் மேலும் கூறியது.
-
Jun 24, 2025 07:29 IST
ஈரானின் இராணுவ நடவடிக்கைகள் 'கடைசி நிமிடம் வரை தொடர்ந்தன' - வெளியுறவு அமைச்சர்
ஈரானின் வெளியுறவு மந்திரி சையத் அப்பாஸ் அரக்சி, நாட்டைப் பாதுகாத்ததற்காக தெஹ்ரானின் இராணுவத்திற்கு நன்றி தெரிவித்ததுடன், இஸ்ரேலுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் "கடைசி நிமிடம் வரை தொடர்ந்தன" என்று கூறினார், அதே நேரத்தில் மோதல்கள் நிறுத்தப்பட்டிருக்கலாம் என்று சுட்டிக்காட்டினார்.
"இஸ்ரேலை அதன் ஆக்கிரமிப்புக்காக தண்டிக்க எங்கள் சக்திவாய்ந்த ஆயுதப்படைகளின் இராணுவ நடவடிக்கைகள் கடைசி நிமிடம் வரை, அதிகாலை 4 மணி வரை தொடர்ந்தன" என்று அரக்ச்சி ஒரு பதிவில் கூறினார்.
தெஹ்ரானின் வெளியுறவு மந்திரி மேலும் கூறுகையில், "அனைத்து ஈரானியர்களுடனும் சேர்ந்து, எங்கள் அன்பான நாட்டை அவர்களின் கடைசி சொட்டு இரத்தம் வரை பாதுகாக்க தயாராக இருக்கும் எங்கள் துணிச்சலான ஆயுதப்படைகளுக்கு நான் நன்றி கூறுகிறேன், மேலும் எதிரியின் எந்தவொரு தாக்குதலுக்கும் கடைசி நிமிடம் வரை பதிலளித்தேன்."
-
Jun 24, 2025 07:28 IST
'அமெரிக்க தாக்குதல்களால் ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்க முடியாது' - வான்ஸ்
ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலால் அதன் செறிவூட்டப்பட்ட யுரேனியத்திலிருந்து அணு ஆயுதங்களைத் தயாரிக்கும் திறனற்றதாக மாறிவிட்டது என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார்.
"எதிர்காலம் என்ன வைத்திருக்கிறது என்பது குறித்து நாம் ஈரானுடனும், நிச்சயமாக இஸ்ரேலுடனும் பேச வேண்டும்," என்று வான்ஸ் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.