Chennai News Live Updates: 'தொண்டர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் துரோகம் செய்யும் அ.தி.மு.க-வை, மக்கள் மன்னிக்க மாட்டார்கள்'; வன்னி அரசு

Tamil Nadu News Update Today 22 June 2025 இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamil Nadu News Update Today 22 June 2025 இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vanni Arasu

Today Latest Live News Update in Tamil 22 June 2025: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • Jun 22, 2025 18:02 IST

    'தொண்டர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் துரோகம் செய்யும் அ.தி.மு.க-வை, மக்கள் மன்னிக்க மாட்டார்கள்'; வன்னி அரசு

    தொண்டர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் துரோகம் செய்யும் அ.தி.மு.க-வை, மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என வி.சி.க துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு விமர்சித்துள்ளார். அதன்படி, "ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சதிச்செயலை கூட புரிந்து கொள்ளாமல் தொண்டர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் இரண்டகம் செய்யும் அ.தி.மு.க-வை தமிழ்நாடும், மக்களும் மன்னிக்க மாட்டார்கள்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.



  • Jun 22, 2025 17:44 IST

    கிண்டியில் தோட்டக்கலை பூங்கா - டெண்டர் கோரிய தமிழ்நாடு அரசு

    சென்னை, கிண்டி ரேஸ் கிளப்பில் இருந்து மீட்கப்பட்ட 118 ஏக்கர் நிலத்தில் தோட்டக்கலை பூங்கா அமைப்பதற்கான டெண்டரை தமிழ்நாடு அரசு கோரியுள்ளது. அதன்படி, மலர் படுகைகள், மலர் சுரங்கப்பாதை, வண்ணத்துப்பூச்சி தோட்டம் உள்ளிட்ட 25 வகையான வசதிகள் உருவாக்கப்பட இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Advertisment
  • Jun 22, 2025 17:09 IST

    பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் 45 நிமிடங்கள் பேச்சு

    பிரதமர் மோடி உடன் ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் சுமார் 45 நிமிடங்கள் தொலைபேசியில் பேசினர்.  அமெரிக்க தாக்குதலை தொடர்ந்து பிரதமர் மோடியை தொலைபேசியில் அழைத்து பேசினார் ஈரான் அதிபர். பேச்சுவார்த்தையின் மூலம் போர் பதற்றத்தை தணிக்க வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு ஈரான் அதிபர் நன்றி தெரிவித்துள்ளார். 



  • Jun 22, 2025 17:06 IST

    எந்த தியாகத்திற்கும் தயாராக இருக்கிறேன்: வைகோ

    எந்த தியாகத்திற்கும் தயாராக இருக்கிறேன், மதிமுக தொண்டர்கள் காவல் தெய்வங்கள்; ஒவ்வொரு வீட்டிலும் மதிமுக கொடியை ஏற்றுங்கள். முல்லைப் பெரியாரை காப்பாற்றியதே ஆட்சியில் இல்லாத மத்தியில் எம்.பிக்கள் இல்லாத நாம் தான்; ஸ்டெர்லைட் விவகாரத்தில் 18 ஆண்டுகள் போராடி அதை முடித்துக் காட்டியது மதிமுகதான் என வைகோ கூறியுள்ளார்.  



  • Advertisment
    Advertisements
  • Jun 22, 2025 16:48 IST

    துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி

    செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே உள்ள திரௌபதி அம்மன் கோவியில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் நாடக கலைஞர்கள் கலந்துகொண்டு துரியோதனின் ராட்சத உருவத்தை உருவாக்கி, பீமன் தன் கையில் வைத்துள்ள கதாயுதத்தால் துரியோதனை தாக்குவது போலவும், அப்போது துரியோதனின் முட்டியில் இருந்து வரும் ரத்தத்தை திரௌபதி கூந்தலில் தடவிக்கொள்வது போலவும் தத்ரூபமாக நடித்து அசத்தினர். ஏராளமான பக்தர்கள் இந்நிகழ்வை கண்டு ரசித்தனர்.



  • Jun 22, 2025 16:30 IST

    விமான விபத்தில் உயிரிழந்தோரின் உடல்களை ஒப்படைக்கும் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது

    அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தோரில் இதுவரை 231 பேரின் டி.என். ஏ பரிசோதிக்கப்பட்டு 210 உடல்கள் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல். 



  • Jun 22, 2025 15:57 IST

    ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு

    ஈரானின் தற்போதைய நிலை தொடர்பாக அதிபர் மசூத் பெஷேஸ்கியனிடம் பிரதமர் மோடி பேசியுள்ளார். ஈரானில் நடைபெற்று வரும் போர் குறித்த ஆழ்ந்த வருத்தங்களை பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 



  • Jun 22, 2025 15:36 IST

    தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் பழுது - ஆட்சியர் ஆய்வு

    சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் பழுது. ஓசூர் அருகே மேம்பாலத்தில் ஏற்பட்ட பழுது குறித்து கிருஷ்ணகிரி ஆட்சியர் தினேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார். மேம்பாலத்தின் வழியாக இலகு ரக வாகனங்களை அனுமதிக்கலாமா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வுக்குப் பின்னரே இலகு ரக வாகனங்கள் அனுமதிக்கப்படும். கிருஷ்ணகிரி ஆட்சியர் மேம்பாலத்தில் வாகனங்கள் செல்ல தடை விதித்து மாற்று வழி மூலம் செல்ல ஏற்பாடு செய்துள்ளார்.



  • Jun 22, 2025 15:34 IST

    "கல்விதான் ஒரே சொத்து, எப்பாடு பட்டாலும் எங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வியை கொடுப்போம்" -தூய்மை பணியாளர்கள் நெகிழ்ச்சி

    சென்னை வடபழனியில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கான அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 36 துப்புரவு பணியாளர்கள் பங்கேற்று, மேடையில் மிடுக்கு நடை போட்டு அசத்தினர். அதன் பின் தூய்மை பணியாளர்களின் குழந்தைகளும் அணிவகுப்பில் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர். 



  • Jun 22, 2025 15:34 IST

    பூங்காவாக மாறும் கிண்டி ரேஸ் கோர்ஸ்

    தமிழ்நாடு அரசு அறிவிப்பின்படி பூங்காவாக மாறுகிறது கிண்டி ரேஸ் கோர்ஸ்.  ரூ.4,832 கோடி மதிப்பிலான இந்த நிலத்தில் பசுமை பூங்கா அமைக்கப்படும் என கடந்தாண்டு செப்டம்பரில் அறிவிக்கப்பட்டது.



  • Jun 22, 2025 15:27 IST

    பவண் கல்யாணுக்கு சால்வை அணிவித்த அண்ணாமலை

    முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க வந்த ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணை, சால்வை அணிவித்து  பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வரவேற்றார். 



  • Jun 22, 2025 13:08 IST

    அடுத்த முதலமைச்சர் யார்? கருத்துக் கணிப்பில் மு.க.ஸ்டாலின் முன்னிலை!

    தமிழ்நாட்டில் அடுத்த முதலமைச்சர் யார் என்பது குறித்த கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. லயோலா முன்னாள் மாணவர்கள் தொடங்கிய இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் அமைப்பு நடத்திய இந்த கருத்துக் கணிப்பில் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கருத்துக் கணிப்பின்படி, 77.83% பேர் மு.க.ஸ்டாலின் அடுத்த முதலமைச்சராக வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். பன்னீர்செல்வத்திற்கு 73.80% பேரும், எடப்பாடி பழனிசாமிக்கு 67.99% பேரும், அண்ணாமலைக்கு 64.56% பேரும், விஜய்க்கு 60.58% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.



  • Jun 22, 2025 11:36 IST

    பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக 2 பேர் கைது

    ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (NIA) முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இத்தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இரண்டு நபர்களை NIA இன்று கைது செய்துள்ளது.

    கைது செய்யப்பட்டவர்கள் ஷாய்ஸான் விஸ்தார்க் பகுதியைச் சேர்ந்த பர்வேஸ் அஹ்மத் மற்றும் பஷீர் அஹ்மத் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும், ஆயுதம் தாங்கிய லஷ்கர்-இ-தொய்பா (Lashkar-e-Taiba) இயக்கத்தைச் சேர்ந்த பாகிஸ்தானிய பயங்கரவாதிகளுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வழங்கி உதவியதாக என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.



  • Jun 22, 2025 11:22 IST

    'புதிய கீதை' வழியில் தீயசக்திகளை எதிர்த்து, நல்லது நடக்க துணை நிற்க வாழ்த்துகிறேன் - விஜய்க்கு தமிழிசை வாழ்த்து

    'தமிழன்', 'ஜன நாயகன்' தம்பி விஜய்க்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். நாளைய தீர்ப்பு-இல் ஆரம்பித்து 'அழகிய தமிழ் மகனாக' வலம் வந்தார் விஜய். 'வாரிசு' அரசியலை எதிர்த்ததால் வந்த இன்னல்களிலிருந்து 'சுறா'வாக நீந்தி 'கில்லி'யாக வெற்றி கண்டவர் விஜய். 'புதிய கீதை' வழியில் தீயசக்திகளை எதிர்த்து, நல்லது நடக்க துணை நிற்க வாழ்த்துகிறேன் என த.வெ.க தலைவர் விஜய்க்கு தமிழிசை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்



  • Jun 22, 2025 11:07 IST

    ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்; சென்னை திரும்பிய லண்டன் விமானம்

    ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் எதிரொலியாக லண்டன் சென்ற விமானம் பாதியிலேயே சென்னை திரும்பியது. மத்திய கிழக்கு நாடுகள் அருகே வான் எல்லை மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து அரபிக்கடல் எல்லையில் பறந்து கொண்டிருந்த விமானம் மீண்டும் சென்னைக்கு திரும்பியது. மத்திய கிழக்கில் வான் எல்லை திறப்படும் நிலையில், மீண்டும் விமானம் புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது



  • Jun 22, 2025 10:43 IST

    மக்களைக் காக்க அனைத்து வழிகளையும் பின்பற்றுவோம் - ஈரான்

    மக்களைக் காக்க அனைத்து வழிகளையும் பின்பற்றுவோம் என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி எச்சரிக்கை விடுத்துள்ளார்



  • Jun 22, 2025 10:28 IST

    ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்... வான்பரப்பை மூடிய இஸ்ரேல்

    ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல், வான்பரப்பை இஸ்ரேல் மூடியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டது. எகிப்து, ஜோர்டானுக்கான தரைவழிப் பாதைகள் திறப்பு என இஸ்ரேல் துறைமுக ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 



  • Jun 22, 2025 09:54 IST

    தவெக தலைவர் விஜய்க்கு சீமான் பிறந்தநாள் வாழ்த்து!

    விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து சீமான் எக்ஸ் பக்கத்தில் பதிவு, "தனித்துவமிக்க நடிப்பு, ஈர்க்கும்படியான நடனம், ரசிக்கத்தக்க நகைச்சுவை, கதாபாத்திரங்களை உள்வாங்கிக் கொண்டு, உயிரோட்டமாகப் பிரதிபலிக்கும் திறன் என எல்லா ஆற்றல்களையும் வளர்த்துக்கொண்டு மக்களை மகிழ்வித்து, தமிழ்த்திரைத்துறையில் உச்சம் தொட்ட ஆகச்சிறந்த திரைக்கலைஞன்! தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்புத்தம்பி விஜய் அவர்களுக்கு என்னுடைய உளப்பூர்வமான பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!”



  • Jun 22, 2025 09:45 IST

    அமெரிக்க தாக்குதலில் பொதுமக்களுக்கு பாதிப்பில்லை

    அமெரிக்கா தாக்குதல் நடத்திய அணுசக்தி நிலையங்களில் எதுவுமே இல்லை. அணுசக்தி நிலையங்களில் தீங்கு விளைவிக்கும் எந்த பொருட்களும் இல்லை. செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்புகள் அந்த அணுசக்தி மையங்களிலிருந்து மாற்றம் மற்றும் அணுசக்தி மேம்பாட்டை நிறுத்த ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அணுசக்தி தளங்கள் மீதான தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தை மீறுவதாகும்.



  • Jun 22, 2025 09:24 IST

    பஹ்ரைனில் அமெரிக்க தளத்தை தாக்குவோம் - காமேனி பிரதிநிதி எச்சரிக்கை

    பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளம் மீது தாக்குதல் நடத்தப்படும். தாமதமின்றி உடனடியாக தாக்குதல் நடத்த இதுவே சரியாண தருணம் என ஈரான் உச்ச தலைவர் காமேனியின் பிரதிநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.



  • Jun 22, 2025 08:59 IST

    மதுரையில் இன்று முருக பக்தர்கள் மாநாடு

    இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்களின் மாநாடு மதுரை பாண்டிகோயில் திடலில் இன்று (ஜூன் 22) பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது.

    மாநாட்டில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அண்டை மாநிலங்களில் உள்ள பாஜக முக்கிய பிரமுகர்களும் பங்கேற்க உள்ளனர். 

    கந்தசஷ்டி கவசத்துடன் தொடங்கும் மாநாட்டில், கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.



  • Jun 22, 2025 08:57 IST

    அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நன்றி - நெதன்யாகு

    ஈரான் அணுசக்தி மையங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல் துணிச்சலான நடவடிக்கை யாரும் செய்ய துணியாத நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது. அமெரிக்காவின் இந்த தாக்குதல் உலகின் அபாயகரமான ஆயுதத்திற்கு எதிரான நடவடிக்கை. மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியை ஏற்படுத்த டிரம்பின் தலைமை உதவியுள்ளது என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.



  • Jun 22, 2025 08:56 IST

    ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பிறகு கதிர்வீச்சு கண்டறியப்படவில்லை - சவுதி கட்டுப்பாட்டாளர்

    ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து சவுதி அரேபியா அல்லது பிற அரபு வளைகுடா நாடுகளின் சுற்றுச்சூழலில் கதிரியக்க தடயங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என்று சவுதி அரேபியாவின் அணுசக்தி கட்டுப்பாட்டாளர் ஞாயிற்றுக்கிழமை எக்ஸ் இல் ஒரு பதிவில் தெரிவித்துள்ளார்.



  • Jun 22, 2025 08:22 IST

    அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை?

    நீங்கள் தொடங்கியதை நாங்கள் முடித்து வைப்போம். அமெரிக்காவின் தாக்குதலை தொடர்ந்து ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது. ஈரானின் மூன்று அணு உலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருந்தது. 



  • Jun 22, 2025 07:57 IST

    ஈரானில் எஞ்சியுள்ள இலக்குகளையும் தகர்ப்போம் - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

    உலகிலேயே தீவிரவாதத்திற்கு அதிக ஆதரவு அளிக்கும் நாடு ஈரான் தான், ஈரானின் அணு உலை கட்டமைப்புகள் தகர்க்கப்பட்டுள்ளன; சில இலக்குகளை நாங்கள் விட்டு வைத்துள்ளோம்; ஈரான் அமைதிப் பாதைக்கு திரும்பாவிடில் எஞ்சியுள்ள இலக்குகளையும் தகர்ப்போம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 



  • Jun 22, 2025 07:55 IST

    "அமெரிக்காவின் தாக்குதல் போரின் தொடக்கம்" - ஹவுதி அமைப்பு

    ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல் போரின் தொடக்கம், அனுசக்தி நிலையத்தை அழிப்பது, போரின் முடிவு அல்ல; அது ஆரம்பம் என ஏமனின் ஹவுதி அமைப்பு விமர்சித்துள்ளது.



  • Jun 22, 2025 07:53 IST

    மதுரையில் இன்று முருக பக்தர்கள் மாநாடு

    இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்களின் மாநாடு மதுரை பாண்டிகோயில் திடலில் இன்று பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. மாநாட்டில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அண்டை மாநிலங்களில் உள்ள பாஜக முக்கிய பிரமுகர்களும் பங்கேற்க உள்ளனர். கந்தசஷ்டி கவசத்துடன் தொடங்கும் மாநாட்டில் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.



  • Jun 22, 2025 07:50 IST

    ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

    ஈரான் மீதான தாக்குதலை மிக வெற்றிகரமாக முடித்துவிட்டோம் அனைத்து விமானங்களும் ஈரானின் வான்வெளிக்கு வெளியே உள்ளன. அமெரிக்க வீரர்களுக்கு வாழ்த்து... வேறு எந்த ராணுவமும் இதைச் செய்திருக்க முடியாது இது அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் உலகிற்கு ஒரு வரலாற்று தருணம் ஈரான் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்புக்கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.



  • Jun 22, 2025 07:48 IST

    ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

    ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. ஈரானுக்கு எதிரான மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கிய அமெரிக்கா வெள்ளை மாளிகையில் நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளேன் என  டிரம்ப் அறிவித்துள்ளார்.



news updates Live News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: