New Update
/tamil-ie/media/media_files/uploads/2018/08/velankanni-matha.jpg)
velankanni matha, IRCTC
IRCTC : மாதா கோவிலில் நடைபெற இருக்கும் திருவிழாவை முன்னிட்டு திருச்சி முதல் வேளாங்கண்ணி வரை சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisment
IRCTC : வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா:
ஆண்டுதோறும் நடைபெறும் மாதா கோவில் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று மாதாவை வழிபடுவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு திருவிழா வரும் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
இதில் கலந்து கொள்வதற்காக பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள் என்ற காரணத்தால், திருச்சியில் இருந்து வேளாங்கண்ணிக்கு வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
- இந்த ரயில் வரும் 29ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 8ஆம் தேதி வரை இயக்கப்படுகிறது.
- இரவு 10.20 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படும் இந்த ரயில், அதிகாலை 3.15 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- தஞ்சையில் இருந்து காரைக்கால் செல்லும் பயணிகள் ரயில், 28 ஆம் தேதி முதல் செப்டம்பர் 8ஆம் தேதி வரை கோவில் வேளாங்கண்ணிக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
Advertisment
Advertisements
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.