இரிடியம் விற்றால் ரூ.1,000 கோடி லாபம்: ஐ.டி. ஊழியரிடம் ரூ.1.87 கோடி மோசடி - மதுரையில் 3 பேர் கைது

மதுரையில், ரூ.6 லட்சம் கோடி மதிப்புள்ள இரிடியத்தை விற்றால் ரூ.1,000 கோடி லாபம் கிடைக்கும் என்று கூறி, சென்னையைச் சேர்ந்த ஐ.டி. ஊழியரிடம் ரூ.1.87 கோடி மோசடி செய்த கும்பலைச் சேர்ந்த சரத்குமார், சுனில் ஆனந்த், வருண்குமார் ஆகிய மூவரைப் போலீசார் கைது செய்தனர்.

மதுரையில், ரூ.6 லட்சம் கோடி மதிப்புள்ள இரிடியத்தை விற்றால் ரூ.1,000 கோடி லாபம் கிடைக்கும் என்று கூறி, சென்னையைச் சேர்ந்த ஐ.டி. ஊழியரிடம் ரூ.1.87 கோடி மோசடி செய்த கும்பலைச் சேர்ந்த சரத்குமார், சுனில் ஆனந்த், வருண்குமார் ஆகிய மூவரைப் போலீசார் கைது செய்தனர்.

author-image
WebDesk
New Update
iridium

இரிடியம் விற்றால் ரூ.1,000 கோடி லாபம்: ஐ.டி. ஊழியரிடம் ரூ.1.87 கோடி மோசடி - மதுரையில் 3 பேர் கைது

மதுரையில், ரூ.6 லட்சம் கோடி மதிப்புள்ள இரிடியத்தை விற்றால் ரூ.1,000 கோடி வரை லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி, ஐ.டி. நிறுவன ஊழியர் ஒருவரிடம் ரூ.1.87 கோடி மோசடி செய்த கும்பலைச் சேர்ந்த மூவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisment

மோசடி நடந்தது எப்படி?

சென்னையில் பணிபுரியும் ஐ.டி. ஊழியர் ஒருவரை கோவையைச் சேர்ந்த ஆனந்த் (சுனில் என்ற பெயரில்) என்பவர் தொடர்புகொண்டுள்ளார். இரிடியம் விற்பனை மூலம் பெரும் லாபம் ஈட்ட முடியும் என அவர் ஊழியரை நம்ப வைத்துள்ளார். பின்னர், கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்த சரத்குமார் என்ற நபரை இரிடிய உரிமையாளராக அறிமுகப்படுத்தி, அந்த ஐ.டி. ஊழியரிடம், இந்த வியாபாரத்தில் 'பார்ட்னராக' இணைந்தால் அதிக வருவாய் கிடைக்கும்” என்று ஆசை காட்டியுள்ளார்.

தொடர்ந்து, மோசடி கும்பல் மதுரையில் உள்ள தனியார் ஓட்டலில் ஐ.டி ஊழியரை சந்தித்துள்ளது. அப்போது, தாங்கள் கொல்கத்தா நிறுவனத்தின் ஊழியர்கள் எனத் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்ட அவர்கள், இரிடியம் பரிசோதனைக்காக ஊழியரிடம் இருந்து ரூ.8.5 லட்சம் பெற்றனர். ‘ரசாயனப் பரிசோதனை’ போல நடித்து, மோசடி நபர்கள், "இரிடியத்தின் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் கோடி முதல் 6 லட்சம் கோடி வரை இருக்கும். இந்த உலோகத்தை வெற்றிகரமாகப் பிரித்தெடுக்க மட்டும் ரூ.1.82 கோடி செலவாகும்" என்று ஊழியரிடம் கூறியுள்ளனர்.

இதற்கிடையில், மோசடி கும்பல் மத்திய அமைச்சரின் மகன் ஒருவரின் பெயரையும் பயன்படுத்தி, "இரிடியத்தை மீட்க ரூ.3 கோடி தர வேண்டும்" என்று கூறி ஊழியரை மேலும் ஏமாற்றியுள்ளனர். இவ்வாறு பல தவணைகளாகப் பணம் வசூலித்து, மொத்தம் ரூ.1.87 கோடியை அவரிடமிருந்து பெற்றுள்ளனர்.

Advertisment
Advertisements

பணத்தைப் பெற்றுக்கொண்ட பிறகு, மோசடி கும்பல், "இரிடியம் வெடித்துவிட்டது" என்று கூறியபோதுதான், அந்த ஐ.டி. ஊழியர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து மதுரை போலீசாரிடம் புகாரளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மோசடியில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த சரத்குமார் (51), சுனில் ஆனந்த் (35) மற்றும் வருண்குமார் (40) ஆகிய மூவரையும் கைது செய்தனர். இந்த மோசடியில் தொடர்புடைய மேலும் சில நபர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Madurai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: