Advertisment

நடிகர் சங்கத் தேர்தல்: நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிட்டதாக வழக்கு - ஐசரி கணேஷ் ஆஜர்

அதற்கு கைமாறாக வழக்கை இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்து, தேர்தலை தள்ளிவைக்கும்படி ஐசரி கணேஷுக்காக அனந்தராமன் தன்னை அணுகியதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ishari ganesh appears chennai high court actors association election - நடிகர் சங்கத் தேர்தல்: நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிட்டதாக வழக்கு - ஐசர் கணேஷ் ஆஜர்

ishari ganesh appears chennai high court actors association election - நடிகர் சங்கத் தேர்தல்: நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிட்டதாக வழக்கு - ஐசர் கணேஷ் ஆஜர்

நடிகர் சங்க தேர்தல் வழக்கில் நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையீட்டு நீதிபதியை நிர்பந்தம் செய்ததாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐசரி கணேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார். மீண்டும் ஜூலை 29ல் நேரில் ஆஜராகி பதில்மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Advertisment

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் மைலாப்பூர் புனித எப்பாஸ் பள்ளியில் நடத்துவதற்கு தேவையான காவல்துறை பாதுகாப்பு வழங்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிடக்கோரி பொதுச் செயலாளர் விஷால் தொடர்ந்த வழக்கை ஜூன் 22ஆம் தேதி மாலை 5 மணிக்கு அவசர வழக்காக நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். அதன்பின்னர், தேர்தல் நடத்த தேவையான பாதுகாப்பை வழங்க சென்னை மயிலாப்பூர் துணை ஆணையருக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில் சுவாமி சங்கரதாஸ் அணியின் பொது செயலாளர் வேட்பாளராக போட்டியிட்ட ஐசரி கணேஷ் சார்பாக இந்த வழக்கை அவரச வழக்காக விசாரிக்க வேண்டாம் என்றும், இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தால் ஜூ 23 தேர்தல் நடைபெறாமல் தள்ளிப்போகும் என வழக்கறிஞர் அனந்தராமன் என்பவர் அணுகியதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார். ஜூன் 22 மாலை 4:20 மணிக்கு மொபைல் மூலமாக நீதிபதியை அனந்தராமன் தொடர்பு கொண்டு, பின்னர் மாலை 4:45 மணிக்கு நீதிபதி வீட்டிற்கு நேரிலும் வந்து வழக்கை ஒத்திவைக்க கோரிக்கை வைத்துள்ளார். நடிகர் சங்கம் நெருக்கடியில் இருந்த காலத்தில் மிகவும் உதவிகரமாக ஐசரி கணேஷ் இருந்ததால், அதற்கு கைமாறாக வழக்கை இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்து, தேர்தலை தள்ளிவைக்கும்படி ஐசரி கணேஷுக்காக அனந்தராமன் தன்னை அணுகியதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக இருவர் மீதும் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். நீதி விசாரணை நடைமுறையில் முறைகேடாக தலையிட்ட ஐசரி கணேஷ், அனந்தராமன் இருவரையும் நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் ஏன் தண்டிக்க கூடாது என்பது குறித்து இருவரும் நான்கு வாரத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஐசரி கணேஷ், அனந்தராமன் ஆகியோர் நேரில் ஆஜராகி பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் கோரினர். அதனையேற்ற நீதிபதிகள் வழக்கை ஜூலை 29ஆம் தேதி ஒத்திவைத்ததுடன், அன்றைய தினம் இருவரும் மீண்டும் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment