/tamil-ie/media/media_files/uploads/2022/09/New-Project17-1.jpg)
மயிலாடுதுறை திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும். இங்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வர். அந்தவகையில் நேற்று இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன், மனைவி மாலதியுடன் வந்து கோயிலில் சாமி தரிசனம் செய்து, ஆயுஷ் ஹோமத்தில் பங்கேற்றார்.
பின்னர், தருமபுரம் ஆதீனத்துக்கு சென்றனர். அங்கு 27ஆவது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து அருளாசி பெற்றனர். அவருக்கு ஆதீனகர்த்தர் திருக்குறள் விளக்கவுரை புத்தகத்தை வழங்கி அருளாசி கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன், "நம் நாடு அனைத்து துறைகளில் வளர்ச்சி கண்டு வருகிறது. உலக அளவில் இந்தியா முதலிடம் பிடிப்பதற்கான நாட்கள் வெகு தூரம் இல்லை. அதற்காக மாநில, மத்திய அரசுகள் செயல்பட்டு வருகிறது.
இனி வருங்காலத்தில் ஆன்மீக அறிவியல் குறித்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்" என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.